பதிவு செய்த நாள்
07 ஜன2013
23:48
மும்பை: புத்தாண்டு பிறந்து நான்கு வர்த்தக தினங்களில், இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்கள், 4,500 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன.சர்வதேச நாடுகள், பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள்வதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. இருந்தபோதிலும், இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, கடந்த நான்கு மாதங்களாக அதிகரித்து வருகிறது.பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு, பல்வேறு நிதி சீர்திருத்த திட்டங்களை அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக, நாட்டின் பங்கு வர்த்தகம் விறுவிறுப்படைந்துள்ளது. மேலும், ஆசிய அளவில், இந்திய பங்குச் சந்தைகளில், முதலீட்டின் மீதான வருவாய் அதிகரித்து காணப்படுகிறது.இதனால், இந்தியாவில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருவதாக, பங்குச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்தனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|