பதிவு செய்த நாள்
07 ஜன2013
23:49
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில், தொடர்ந்து வரத்து இருப்பதால், தக்காளி விலை கடந்த ஆண்டை விட குறைய துவங்கியுள்ளது.ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள பகுதிகளில், தக்காளி அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. நாட்டு ரகத்தை விட, ஒட்டு ரக தக்காளி ரகங்களே விரும்பி விதைக்கப்படுகின்றன.கடந்த ஆண்டு ஜனவரியில், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில், தக்காளி பெட்டி (14 கிலோ) அதிகபட்சமாக, 400 ரூபாய்க்கு விற்றது. அப்போது பருவமழை பெய்ததால், இப்பகுதியில் நடப்பட்டிருந்த தக்காளி செடிகளில் உள்ள பூக்கள் உதிர்ந்து, மழைநீர் தேங்கி, மகசூல் பாதிக்கப்பட்டது. தக்காளி வரத்து குறைவாக இருந்ததால் விலை உச்சத்திற்கு சென்றது.ஆனால், இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், தக்காளி செடிகள் சேதமடையாமல் உள்ளன. இதன் விளைச்சலும் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே உள்ளது. இதனால், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில், தக்காளி வரத்து அதிகமாக உள்ளது. தற்போது, ஒரு கிலோ தக்காளி பெட்டி (14 கிலோ) 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.காய்கறி உரிமையாளர் நலச்சங்க முன்னாள் செயலர் ஆறுமுகம் கூறுகையில், "தற்போது பறிக்கும் பருவம் என்பதால், அதிக வரத்து உள்ளது. தக்காளி பறிப்பு இன்னும் உச்சத்தை அடையவில்லை. வரத்து மேலும் அதிகரிக்கும் போது இதன் விலை இன்னும் குறைவதற்கு வாய்ப்புள்ளது' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|