பதிவு செய்த நாள்
07 ஜன2013
23:50
டில்லி: நடப்பு, 2013ம் ஆண்டில், இந்தியாவிலிருந்து, அபுதாபிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது. சென்ற, 2012ம் ஆண்டில், அபுதாபிக்கு வருகை புரிந்த, இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 1.25 லட்சமாக இருந்தது என, அபுதாபி சுற்றுலா மற்றும் கலாசார ஆணையத்தின் மேலாளர், முபாரக் ரஷீத் அல் நுயி தெரிவித்தார்.ஊக்குவிப்பு சலுகைகள், டில்லி, ஆமதாபாத், மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கண்காட்சிகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக, சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவர திட்டமிடப்பட்டுள்ளது.சென்ற ஆண்டில், 1.25 லட்சம் இந்திய சுற்றுலா பயணிகள், 4,96,581 இரவுப் பொழுதுகளை, அபுதாபி ஓட்டல் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் கழித்துள்ளனர்.கடந்த, 12 மாதங்களாக, இங்கிலாந்து மற்றும் இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இதையடுத்து, நடப்பாண்டில், ஒட்டு மொத்த அளவில், 25 லட்சம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, முபாரக் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|