பதிவு செய்த நாள்
07 ஜன2013
23:51
- நமது சிறப்பு நிருபர் -தமிழகத்தில் பொங்கல் பண்டிகையில் முக்கிய பங்கு வகிக்கும், பச்சரிசி முதல் கரும்பு வரை, அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.சர்க்கரை பொங்கல் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும், பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை, நெய் என, அனைத்து பொருட்களின் விலையும், 10 முதல், 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அது மட்டுமின்றி, காய்கறிகள், கிழங்கு வகைகள், தேங்காய், பழம், மஞ்சள், பூக்கள் ஆகியவற்றின் விலையும், 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக, பருவ மழை பொய்த்து விட்டதால், செங்கரும்பின் விலை, இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில், புது மண் பானையின் விலை, கடந்த ஆண்டை விட, 30 ரூபாய் முதல், 45 ரூபாய் வரை, அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் எவர் சில்வர், அலுமினிய பாத்திரங்களின் விலை, 100 முதல் 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.பொங்கல் பண்டிகைக்கு மறு நாள், கரிநாளில் வீடுகளில் அசைவம் சமைப்பது வாடிக்கை. அந்த வகையில், அசைவ விருந்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஆட்டுக் கறி விலை மட்டுமின்றி, நாட்டுக் கோழி, பிராய்லர் கோழி, மீன் ஆகியவற்றின் விலையும், 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பொருட்கள் விலை உயர்ந்துள்ள போதிலும், பொங்கலை முன்னிட்டு, அவற்றின் விற்பனை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளதால், இந்த பொருட்களின் விலை, மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|