அபுதாபி செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 30 சதவீதம் உயரும்புது அபுதாபி செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 30 சதவீதம் உயரும்புது ... டீசல் மானிய சுமையை குறைக்க புதிய திட்டம்? டீசல் மானிய சுமையை குறைக்க புதிய திட்டம்? ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
பொங்கல் பொருட்கள் விலை இரு மடங்கு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2013
23:51


- நமது சிறப்பு நிருபர் -தமிழகத்தில் பொங்கல் பண்டிகையில் முக்கிய பங்கு வகிக்கும், பச்சரிசி முதல் கரும்பு வரை, அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.சர்க்கரை பொங்கல் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும், பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை, நெய் என, அனைத்து பொருட்களின் விலையும், 10 முதல், 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அது மட்டுமின்றி, காய்கறிகள், கிழங்கு வகைகள், தேங்காய், பழம், மஞ்சள், பூக்கள் ஆகியவற்றின் விலையும், 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக, பருவ மழை பொய்த்து விட்டதால், செங்கரும்பின் விலை, இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில், புது மண் பானையின் விலை, கடந்த ஆண்டை விட, 30 ரூபாய் முதல், 45 ரூபாய் வரை, அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் எவர் சில்வர், அலுமினிய பாத்திரங்களின் விலை, 100 முதல் 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.பொங்கல் பண்டிகைக்கு மறு நாள், கரிநாளில் வீடுகளில் அசைவம் சமைப்பது வாடிக்கை. அந்த வகையில், அசைவ விருந்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஆட்டுக் கறி விலை மட்டுமின்றி, நாட்டுக் கோழி, பிராய்லர் கோழி, மீன் ஆகியவற்றின் விலையும், 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பொருட்கள் விலை உயர்ந்துள்ள போதிலும், பொங்கலை முன்னிட்டு, அவற்றின் விற்பனை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளதால், இந்த பொருட்களின் விலை, மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)