அபுதாபி செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 30 சதவீதம் உயரும்புது அபுதாபி செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 30 சதவீதம் உயரும்புது ... டீசல் மானிய சுமையை குறைக்க புதிய திட்டம்? டீசல் மானிய சுமையை குறைக்க புதிய திட்டம்? ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சர்க்கரை விலையில் திடீர் சரிவு: பதுக்கல் வியாபாரிகள் பீதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2013
23:52

சேலம்: கச்சா சர்க்கரை வரத்து அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் சர்க்கரை விலையில், திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், சர்க்கரையை பதுக்கி வைத்த வியாபாரிகள் பீதி அடைந்துள்ளனர்.கலக்கம்சர்க்கரை விலை, குவிண்டாலுக்கு, 200 ரூபாய் வரை சரிவடைந்து, 3,600 ரூபாய்க்கு விற்பனை ய்யப்படுகிறது. விலை மேலும் சரியும் என, எதிர்பார்க்கப்படுவதால், பதுக்கல் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.கடந்த, 2009 ஜனவரி மாதத்தில் உயர துவங்கிய சர்க்கரை விலை, தொடர்ந்து அதிகரித்து, 2012, ஜனவரியில் அதிகபட்சமாக கிலோ, 48 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. சர்க்கரை விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு இந்தோனேசியாவில் இருந்து, அதிக அளவில் கச்சா சர்க்கரை இறக்குமதி செய்ததால், சர்க்கரை விலை கிலோ, 40 ரூபாயாக குறைந்தது.வடமாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு, 500 டன் சர்க்கரை விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா சர்க்கரை சுத்திகரிப்பு செய்யப்பட்டு, விற்பனைக்கு வரத் துவங்கி உள்ளது.இதனால், தமிழகத்துக்கு மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து, சர்க்கரை வரத்து அதிரித்துள்ளது. வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் சர்க்கரை விலை, கிலோ 30 ரூபாய் வரை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வரத்து அதிகரித்துள்ள நிலையில் வியாபாரிகள் "சிண்டிகேட்' அமைத்துக் கொண்டு, சில்லரை வியாபாரத்தில் விலை குறைப்பு செய்யாமல் உள்ளனர்.கச்சா சர்க்கரைமொத்த விற்பனையில், ஒரு குவிண்டால் சர்க்கரை, 3,600 ரூபாய்க்கும், சில்லரையில், 37 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த சர்க்கரை மொத்த வியாபாரி சங்கரராமன் கூறியதாவது:மத்திய அரசு, சர்க்கரை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், கச்சா சர்க்கரை இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ளது. அதேசமயம், நடப்பாண்டு சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ளது.இதனால், வட மாநில வியாபாரிகள் தமிழகத்துக்கு அதிக அளவில் சர்க்கரையை விற்பனைக்கு அனுப்புகின்றனர்.தமிழகத்தில், பொங்கல் பண்டிகை காரணமாக சர்க்கரை, வெல்லத்தின் உற்பத்தியில் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த பத்து நாட்களாக, சந்தையில் மந்த நிலை õணப்படுகிறது.மொத்த விலைஇந்நிலையில், மொத்த விலையில் குவிண்டாலுக்கு, 200 ரூபாயும், சில்லரை விலையில், கிலோவுக்கு இரண்டு ரூபாய் வரையும் சரிவு ஏற்பட்டு உள்ளது. வரத்து அதிகரித்து வருவதால், விலையில் மேலும் சரிவு ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)