பதிவு செய்த நாள்
07 ஜன2013
23:52
புதுடில்லி: : மத்திய அரசு, டீசல் மானியச் சுமையை குறைப்பதற்கான புதிய திட்டம் குறித்து, பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.மத்திய அரசு, ஒரு லிட்டர் டீசல் விற்பனையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பின் அடிப்படையில், மானியம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.இதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, மத்திய அரசுக்கு டீசல் மானியச் செலவும் குறையும்.தற்போது, எண்ணெய் நிறுவனங்களின் ஓராண்டு டீசல் விற்பனை அடிப்படையில், தற்காலிக மானிய தொகையை மத்திய அரசு வழங்குகிறது.புதிய திட்டம் அறிமுகமானால், மத்திய அரசின் மானியச் சுமை, குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.முன்னதாக, டீசல் விலையில், மாதந்தோறும் லிட்டருக்கு ஒரு ரூபாய் வீதம், 10 ரூபாய் வரை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.ஆனால் இவ்வாண்டில், 10 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இத்திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.எண்ணெய் நிறுவனங்கள், அடக்க விலைக்கும் குறைவாக டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றை விற்பனை செய்கின்றன.இதனால், நடப்பு நிதியாண்டில், இந்நிறுவனங்களுக்கு, 1.80 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|