பதிவு செய்த நாள்
07 ஜன2013
23:54
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கட் கிழமையன்று மோசமாக இருந்தது. லாப நோக்கம் கருதி, முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.இதர ஆசியப் பங்கு சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. அதே சமயம், ஐரோப்பிய பங்கு சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.நேற்றைய வர்த்தகத்தில், பொறியியல், ரியல் எஸ்டேட், நுகர்பொருட்கள் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின.இருப்பினும், உலோகம், ஆரோக்கிய பராமரிப்பு, மோட்டார் வாகனம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 92.66 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,691.42 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்கு சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,856.43 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,654.46 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், எல் அண்டு டி, இந்துஸ்தான் யூனிலிவர், டாட்டா பவர் உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், மாருதி, சிப்லா, ஹிண்டால்கோ உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 27.75 புள்ளிகள் சரிவடைந்து, 5,988.40 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 6,042.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,977.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|