பதிவு செய்த நாள்
09 ஜன2013
00:57
சென்னை:தமிழகத்தில் ஊரக கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, நபார்டு, 29.87 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க அனுமதி அளித்துள்ளது.நபார்டு என்று சுருக்கமாக அழைக்கப்படும், தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி, உள்நாட்டில், கிராமங்களில் சாலை, மேம்பாலம், அடிப்படை கட்டமைப்பு, நீர் பாசனம், பள்ளி கட்டடம், குடிநீர், போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியை, வழங்கி வருகிறது.தற்போது, தமிழகத்திற்கு, நபார்டு ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு, 17 மாவட்டங்களில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்காக, 28.37 கோடி ரூபாய் திட்டச் செலவில், 44 விடுதிகள் கட்டப்பட உள்ளன.
இதன் மூலம், 466 கிராமங்களைச் சேர்ந்த, 2,200 மாணவர்கள் பயனடைவர்.மீதமுள்ள, 1.50 கோடி ரூபாயை கொண்டு, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில், 3,000 டன் உணவு தானியங்கள் சேமிக்கும் வகையில், இரண்டு சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|