பதிவு செய்த நாள்
09 ஜன2013
00:58
சென்னை:ஆரோக்கிய பராமரிப்பு துறையில்,120 ஆண்டு கால பாரம்பரியத்தை கொண்ட, அமிர்தாஞ்சன் நிறு வனம், புரூட்னிக் பிராண்டை கையகப்படுத்தியுள்ளது. இதையடுத்து, 'பழங்களின் சக்தி' என்ற முழக்கத்துடனும், மெருகேற்றப்பட்ட புதுப் பொலிவுடன் புரூட்னிக் பழரசம் அறிமுகமாகி உள்ளது.இது குறித்து, அமிர்தாஞ்சன் குளிர்பான பிரிவின் துணைத்தலைவர் (சந்தைப்படுத்துதல்) கே.என். ஸ்ரீகாந்தா கூறியதாவது:
ஆரோக்கியமான வளம் நிறைந்த வாழ்க்கை முறைக்கு, பழங்களின் சக்தி மிகவும் இன்றியமையாதது. நிறுவனம், இதை உணர்ந்து, புதுப் பொலிவுடன் புரூட்னிக் பழரசத்தை அறிமுகம் செய்துள்ளது.இதையடுத்து,வாடிக்கை யாளர்கள், மாம்பழம், ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை என, பல சுவைகளில் புரூட்னிக் பழரச பானத்தை சுவைத்து மகிழலாம்.
முன்பு, தமிழகத்தில், ஒரு சில பகுதிகளில் மட்டுமே கிடைத்து வந்த புரூட்னிக் பழரச பானம், தமிழகம் முழுவதிலும் உள்ள சந்தையை ஆக்கிரமிக்க உள்ளது. இதுமட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநில சந்தைகளில் மூன்றாம் இடத்தை பிடிக்கும் வகையில், நிறுவனம், திட்டமிட்டு செயலாற்ற உள்ளது. இவ்வாறு ஸ்ரீகாந்தா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|