பதிவு செய்த நாள்
09 ஜன2013
01:00
புதுடில்லி:மத்திய அரசு, பொது வினியோக திட்டத்திற்காக, ஆலைகளிடம் கொள்முதல் செய்யும் சர்க்கரையின் விலையை கிலோவிற்கு, 2 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.சென்ற 2011-12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்.,-செப்.,), சர்க்கரை கொள்முதல் விலை, கிலோவுக்கு, 19.04 ரூபாய் என, மத்திய அரசு நிர்ணயித்திருந்தது.
இதையடுத்து, நடப்பு 2012-13ம் சந்தைப் பருவத்திற்கான சர்க்கரை கொள்முதல் விலையை, கிலோவிற்கு, 2 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தி, 22 ரூபாயாக நிர்ணயம் செய்யும் என, தெரிகிறது.கொள்முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் பட்சத்தில், மத்திய நிதி அமைச்சகத்திற்கு, 400 - 500 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு, ஆலைகளிடம் கொள்முதல் செய்யும் சர்க்கரையை, கிலோ, 13.50 ரூபாய் என்ற விலையில், பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்குகிறது. இந்த வகையில், நியாய விலை கடைகள் மூலம், ஆண்டுக்கு, 27 லட்சம் டன் சர்க்கரை விற்பனை செய்யப்படுகிறது.நடப்பு பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.30 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த பருவத்தில், 2.60 கோடி டன்னாக இருந்தது.நடப்பாண்டு உள் நாட்டில் சர்க்கரைக்கான தேவை, 2.10-2.22 கோடி டன் என்ற அளவிற்கே இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|