பொருளாதார சுணக்க நிலையால் ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறதுபொருளாதார சுணக்க நிலையால் ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது ... பரஸ்பர நிதியங்களின் சொத்து மதிப்பு ரூ.7.86 லட்சம் கோடி பரஸ்பர நிதியங்களின் சொத்து மதிப்பு ரூ.7.86 லட்சம் கோடி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வீட்டு கடனை முறையாக செலுத்தும் மகளிர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2013
01:07

சென்னை:வீட்டு வசதி கடன் பெறுவோரில்,பெண்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன், தவறாமல், தவணையை செலுத்தி வருகின்றனர். இதனால், எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் (எல்.ஐ.சி.எச்.எப்.,) போன்ற நிதி நிறுவனங்கள், பெண்களுக்கென்று குறைந்த வட்டியில், பிரத்யேக வீட்டு வசதி கடன் திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
குறைந்த வட்டி:எல்.ஐ.சி.எச்.எப்., நிறுவனம், "பாக்யலட்சுமி' என்ற வீட்டு வசதி கடன் திட்டத்தின் கீழ், அதிக வாடிக் கை யாளர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, வழக்கமான வட்டியை விட, 0.25 சதவீதம் குறைவான வட்டி விகிதத்தை நிர்ணயித்துஉள்ளது.
இந்திய வீட்டு வசதி கடன் துறையில், மூன்றாவது இடத்தில் உள்ள இந்நிறுவனத் திடம், 8 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவற்றில், 1.47 லட்சம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.வீட்டு வசதி கடனுக்கு விண்ணப்பிக்கும் பெரும்பாலான பெண்களில், அரசு பணியாளர்களின் பங்களிப்பு குறிப் பிடத்தக்க அளவிற்கு உள்ளது.
குடும்ப பொறுப்பை நிர்வகிக்கும் பெண்கள், வீட்டு கடனை திரும்பச் செலுத்துவதில், பொறுப்புணர்வுடன் செயல் படுகின்றனர்.இதனால், ஒருவர், தமது மனைவியை முதல் விண்ணப்பதாரராக குறிப்பிட்டு, வீட்டு வசதி கடன் கோரினால், உடனடியாக வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து கடன் பெறும் சூழல் உள்ளது.
வசூலாகாத கடன்:வங்கிகள், அவற்றின் வசூலாகாத கடன்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அவற்றில், பெண்களுக்கு அதிக அளவில் வீட்டு வசதி கடன் வழங்குவதும் ஒன்றாகும் என, வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாடகை தொல்லையில் இருந்து விடுபட, சொந்த வீடு வாங்குவதற்காக கடன் பெறும் பெண்கள், அக்கடனை ஒழுங்காக திரும்ப செலுத்துகின்றனர். அதேசமயம், முதலீட்டு நோக்கத்தில் வீட்டு வசதி கடன் பெறுவோர் தான், தவணையை கட்டத் தவறுகின்றனர் என, அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)