பதிவு செய்த நாள்
09 ஜன2013
01:13
புதுடில்லி:சென்ற டிசம்பருடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 7.86 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தை (7.47 லட்சம் கோடி ரூபாய்) விட, 5 சதவீதம் அதிகமாகும்.
ஐ.சி.ஐ.சி.ஐ. புரெடென்ஷியல்:பரஸ்பர நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, கடந்த மூன்று காலாண்டுகளாக அதிகரித்து வருகிறது என, பரஸ்பர நிதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (ஏ.எம். எப்.ஐ.,) தெரிவித்துள்ளது. இந்தி யாவில், 44 பரஸ்பர நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், நடப்பு நிதியாண்டின், மூன்றாவது காலாண்டில், எச்.டீ.எப்.சி., ரிலையன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. புரெடென்ஷியல் உள்ளிட்ட, 33 நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சிறப்பான அளவில் அதிகரித்துஉள்ளது.
அதேசமயம், பி.என்.பீ.பரிபாஸ், எடெல்வைஸ், கோல்ட்மேன் சாக்ஸ், டாட்டா மியூச்சுவல் பண்டு போன்ற நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், எச்.டீ. எப்.சி. மியூச்சுவல் பண்டு நிர்வகிக்கும் சராசரி சொத்து மதிப்பு, 3.7 சதவீதம் உயர்ந்து, 1.01 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து, ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டு நிர்வகிக்கும் சராசரி சொத்து மதிப்பு, 5 சதவீதம் உயர்ந்து, 90,600 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பங்கு சார்ந்த திட்டங்கள்:மதிப்பீட்டு காலத்தில், பரஸ்பர நிதியங்கள், பங்குச் சார்ந்த பரஸ்பர நிதி திட்டத்தின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 2.10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, இதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டை (2.02 லட்சம் கோடி ரூபாய் ) விட, 4 சதவீதம் அதிகமாகும். கணக்கீட்டு காலத்தில், இந்நிறுவனங்கள், நிதிச் சந்தையின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 4 சதவீதம் குறைந்து, 1.78 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 1.71 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடன் பத்திரங்கள்:குறுகிய கால "அல்ட்ரா' திட்டத்தின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 2 சதவீதம் குறைந்து, 1.15 லட்சம் கோடியிலிருந்து, 1.12 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.குறுகிய கால கடன் பத்திரங்களின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 43 சதவீதம் வளர்ச்சி கண்டு, 41,300 கோடியிலிருந்து, 59,100 கோடி ரூபாயாக அதி கரித்து உள்ளது. நீண்ட கால கடன் பத்திரங்களின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 62 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 39 ஆயிரம் கோடியிலிருந்து, 63,200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
"கில்ட்' திட்டத்தின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 45 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,300 கோடியில் இருந்து, 4,800 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. குறித்த கால முதிர்வு திட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, 8 சதவீதம் குறைந்து, 1.19 லட்சம் கோடியில் இருந்து, 1.09 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இதர கடன் பத்திர திட்டங்களின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 11 சதவீதம் உயர்ந்து, 35,200 கோடியிலிருந்து, 39,100 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
"கோல்டு ஈ.டி.எப்: "கோல்டு ஈ.டி.எப்.' திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, 13 சதவீதம் அதிகரித்து, 3,600 கோடியிலிருந்து, 4,100 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது. "பண்டு ஆப் பண்டு' திட்டத்தின் கீழ் நிர் வகிக்கும் சொத்து மதிப்பு, 70,783 கோடி ரூபாயில்இருந்து, 70,638 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|