பொருளாதார சுணக்க நிலையால் ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறதுபொருளாதார சுணக்க நிலையால் ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது ... ஸ்டெயின்லெஸ் ஸ்டீலுக்கு வர்த்தக பாதுகாப்பு வரி ஸ்டெயின்லெஸ் ஸ்டீலுக்கு வர்த்தக பாதுகாப்பு வரி ...
பரஸ்பர நிதியங்களின் சொத்து மதிப்பு ரூ.7.86 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2013
01:13

புதுடில்லி:சென்ற டிசம்பருடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 7.86 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தை (7.47 லட்சம் கோடி ரூபாய்) விட, 5 சதவீதம் அதிகமாகும்.
ஐ.சி.ஐ.சி.ஐ. புரெடென்ஷியல்:பரஸ்பர நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, கடந்த மூன்று காலாண்டுகளாக அதிகரித்து வருகிறது என, பரஸ்பர நிதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (ஏ.எம். எப்.ஐ.,) தெரிவித்துள்ளது. இந்தி யாவில், 44 பரஸ்பர நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், நடப்பு நிதியாண்டின், மூன்றாவது காலாண்டில், எச்.டீ.எப்.சி., ரிலையன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. புரெடென்ஷியல் உள்ளிட்ட, 33 நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சிறப்பான அளவில் அதிகரித்துஉள்ளது.
அதேசமயம், பி.என்.பீ.பரிபாஸ், எடெல்வைஸ், கோல்ட்மேன் சாக்ஸ், டாட்டா மியூச்சுவல் பண்டு போன்ற நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், எச்.டீ. எப்.சி. மியூச்சுவல் பண்டு நிர்வகிக்கும் சராசரி சொத்து மதிப்பு, 3.7 சதவீதம் உயர்ந்து, 1.01 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து, ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டு நிர்வகிக்கும் சராசரி சொத்து மதிப்பு, 5 சதவீதம் உயர்ந்து, 90,600 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பங்கு சார்ந்த திட்டங்கள்:மதிப்பீட்டு காலத்தில், பரஸ்பர நிதியங்கள், பங்குச் சார்ந்த பரஸ்பர நிதி திட்டத்தின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 2.10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, இதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டை (2.02 லட்சம் கோடி ரூபாய் ) விட, 4 சதவீதம் அதிகமாகும். கணக்கீட்டு காலத்தில், இந்நிறுவனங்கள், நிதிச் சந்தையின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 4 சதவீதம் குறைந்து, 1.78 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 1.71 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடன் பத்திரங்கள்:குறுகிய கால "அல்ட்ரா' திட்டத்தின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 2 சதவீதம் குறைந்து, 1.15 லட்சம் கோடியிலிருந்து, 1.12 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.குறுகிய கால கடன் பத்திரங்களின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 43 சதவீதம் வளர்ச்சி கண்டு, 41,300 கோடியிலிருந்து, 59,100 கோடி ரூபாயாக அதி கரித்து உள்ளது. நீண்ட கால கடன் பத்திரங்களின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 62 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 39 ஆயிரம் கோடியிலிருந்து, 63,200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
"கில்ட்' திட்டத்தின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 45 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,300 கோடியில் இருந்து, 4,800 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. குறித்த கால முதிர்வு திட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, 8 சதவீதம் குறைந்து, 1.19 லட்சம் கோடியில் இருந்து, 1.09 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இதர கடன் பத்திர திட்டங்களின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 11 சதவீதம் உயர்ந்து, 35,200 கோடியிலிருந்து, 39,100 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
"கோல்டு ஈ.டி.எப்: "கோல்டு ஈ.டி.எப்.' திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, 13 சதவீதம் அதிகரித்து, 3,600 கோடியிலிருந்து, 4,100 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது. "பண்டு ஆப் பண்டு' திட்டத்தின் கீழ் நிர் வகிக்கும் சொத்து மதிப்பு, 70,783 கோடி ரூபாயில்இருந்து, 70,638 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)