பதிவு செய்த நாள்
09 ஜன2013
10:04
புதுடில்லி: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலுக்கு 20 சதவீத உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜிந்தால் ஸ்டெயின்லெஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் செயல் இயக்குனர் ரமேஷ் நாயர் இது குறித்து பேசுகையில், மத்திய அரசு விதித்துள்ள வர்த்தக பாதுகாப்பு வரி வரவேற்கத்தக்கதும், உள்நாட்டு நிறுவனங்களுக்கு சாதகமானதும் ஆகும். இந்த நடவடிக்கை சீனாவிலிருந்து இறக்குமதியை கட்டுப்படுத்த உதவும் என்றார்.நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஸ்டெயின்லேஸ் ஸ்டீல் ஆண்டுக்கு 8 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இருந்தாலும் சீனாவிலிருந்து ஆண்டுக்கு 25 லட்சம் முதல் 30 லட்சம் டன் வரை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் இறக்குமதி செய்யப்படுகிறது. விலை மலிவாக இருப்பதே இதற்கு காரணமாகும். ஜிந்தால் ஸ்டெயின்லெஸ், செயில் நிறுவனத்தின் சேலம் உருக்காலை, வீரஜ் ஸ்டீல் மற்றும் முகந்த் ஆகியவை இந்தியாவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் நிறுவனங்களாகும். 2011 நவம்பர் மாதத்தில் ஐரோப்பா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் தைவானிலிருந்து வரும் சில வகை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகள் மீது பொருள் குவிப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|