பதிவு செய்த நாள்
10 ஜன2013
00:37
சென்னை:ஜோயாலுக்காஸ் ஜுவல்லரி நிறுவனம், நகைகள் தயாரிப்பு, விற்பனை மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் முறையே, நடிகர் மாதவன், சுரேஷ் கோபி, சுதீப் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோரை, புதிய விளம்பர தூதர்களாக நியமனம் செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸ் கூறியதாவது: வாடிக்கையாளர்களின் ரசனை மற்றும் விருப்பங்களை நிறைவேற்றிடும் வகையில், நிறுவனம், புதிய கலெக்ஷன்கள் மற்றும் டிசைன்களில் நகைகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.இந்தியாவில், அதன் 10வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையிலும், நிறுவனத்தின் பிராண்டை வெளிப்படுத்தும் வகையிலும், மேற்கண்ட, நான்கு புதிய விளம்பர தூதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
"உலகளவில் உள்ளூரில்' என்னும் தாரகமந்திரத்திற்கு ஏற்ப, சர்வதேச தரத்திலான நகைகளை, உள்ளூரிலும் வழங்க உறுதிபூண்டுள்ளோம்.வரும் மூன்று ஆண்டுகளில், இந்தியாவில் மட்டும் கூடுதலாக, 60 ஷோரூம்களை துவக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஜோய் ஆலுக்காஸ் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|