உற்பத்தி குறைவால் சணல் பை பற்றாக்குறை மேலும் உயரும் உற்பத்தி குறைவால் சணல் பை பற்றாக்குறை மேலும் உயரும் ... ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ...
முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனையில் சரிவு நிலை : சொத்து விலை உயர்வு, அதிக வட்டியால்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2013
23:49

புதுடில்லி: கடந்த 2012ம் ஆண்டில், நாட்டின் முக்கிய ஆறு நகரங்களில், குடியிருப்பு வீடுகள் விற்பனை, 16 சதவீதம் சரிவடைந்து, 2.10 லட்சம் என்ற எண்ணிக்கையில் குறைந்துள்ளது என, "நைட் பிராங்க்' என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.டில்லி - என்.சி.ஆர்., மும்பை, சென்னை, புனே, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில், குடியிருப்பு வீடுகள் விற்பனை, கடந்த 2012ம் ஆண்டில், முந்தைய 2011ம் ஆண்டை விட, மிகவும் குறைந்து உள்ளதாக தெரிய வந்துள்ளது.வட்டி விகிதம்வீட்டு மனைகளின் விலை அதிகரித்துள்ளதாலும், வீட்டு வசதி கடனுக்கான வட்டி உயர்வாலும், வீடுகள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, பொருளாதார சுணக்க நிலையால், மக்களின் செலவிடும் வருவாய் குறைந்துள்ளது. இதுவும், குடியிருப்பு வீடுகள் விற்பனை சரிவிற்கு காரணம் என, கூறப்படுகிறது.மேற்கண்ட ஆறு முக்கிய நகரங்களில், சென்ற ஆண்டில், புதிய குடியிருப்பு திட்டங்கள், 30 சதவீதம் குறைந்துள்ளன. விற்பனைஇந்த சரிவு நிலை, கடந்த 2011ம் ஆண்டில், 7 சதவீதம் என்ற அளவில் இருந்தது. மேற்கண்ட நகரங்களில், சென்ற ஆண்டில், 2,41,811 குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டன. இது, இதற்கு முந்தைய ஆண்டில், 3,43,142 என்ற எண்ணிக்கையில் இருந்தன.அதேசமயம், மேற்கண்ட ஆண்டுகளில் விற்பனையான வீடுகளின் எண்ணிக்கை, முறையே, 2,09,787 மற்றும் 2,49,127 ஆக இருந்தது. அதாவது, மேற்கண்ட ஆண்டுகளில், விற்பனையான வீடுகளின் எண்ணிக்கை முறையே, 16 சதவீதம் மற்றும் 14 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்துள்ளது.வீடுகள் வாங்குவது குறைந்துள்ளதால், பல கட்டுமான நிறுவனங்கள், குடியிருப்புத் திட்டங்களை குறைத்துக் கொண்டுள்ளன.கடந்த 2010ம் ஆண்டு, ஜூலை மாதம் முதல், குடியிருப்புகளுக்கான தேவை மற்றும் விற்பனை அதிகரித்ததையடுத்து, வங்கிகள் வழங்கிய கடன் இரட்டை இலக்க அளவிற்கு வளர்ச்சி கண்டிருந்தது. வேலைவாய்ப்புஇந்நிலையில், வட்டி விகிதம் அதிகரிப்பு, ரியல் எஸ்டேட் விலை உயர்வு மற்றும் வேலை வாய்ப்பில் ஏற்பட்ட சுணக்க நிலை போன்றவற்றால், 2012ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு, வங்கிகளின் வீட்டு வசதி கடன் வளர்ச்சி மிகவும் குறைந்துள்ளதாக, ஆய்வு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.இந்நிலையில், சர்வதேச சொத்துகள் குறித்த ஆய்வு நிறுவனமான, குஷ்மன் அண்டு வேக்பீல்டு நிறுவனம், மேற்கண்ட ஆறு நகரங்கள் தவிர, கோல்கட்டா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களிலும், சென்ற ஆண்டில் வீடுகள் விற்பனையில் சரிவு நிலை இருந்ததாக தெரிவித்துள்ளது.இந்நிறுவனத்தின் ஆய்வின் படி, நாட்டின் எட்டு முக்கிய நகரங்களில், சென்ற ஆண்டு, வீடுகள் விற்பனை, 16 சதவீத அளவிற்கு குறைந்து போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பெரு நகரங்களில், கட்டப்பட்ட வீடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்படாததால், பல கட்டுமான நிறுவனங்களின் முதலீடு முடங்கி போயுள்ளதாக கூறப்படுகிறது. பணவீக்கம்இருப்பினும், தற்போதைய சூழ்நிலைதான் வீடுகள் வாங்குவதற்கு ஏற்ற தருணம் என, இந்த ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.அதேசமயம், பணவீக்கம் அதிகரிப்பு, வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளது மற்றும் குடியிருப்புகளின் விலை மிகவும் அதிகமாக இருப்பது போன்றவையும், வீடுகள் விற்பனை குறைவிற்கு காரணம் என, குஷ்மன் அண்டு வேக்பீல்டு நிறுவனம் அதன் ஆய்வு அறிக்கையில் மேலும் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)