பதிவு செய்த நாள்
12 ஜன2013
16:11
மோட்டார் வாகனங்களில் அதிகபடியாக உபயோகப்படுத்தப்படுவது ஆயில்கள் தான். ஆயில்கள் தான் என்ஜின்களின் உராய்வு தன்மையை மெருகேற்றி வாகனத்தை இலகுவாக இயங்க வைக்க உதவுகின்றன. இத்தகைய ஆயில்கள் பல்வேறு வகையாக உள்ளன. அதாவது மூன்று முக்கிய வகை ஆயில்கள் உள்ளன. 1.கன்வென்ஷனல், 2.சிந்தெடிக், 3.சிந்தெடிக் பிளன்ட். இந்த மூன்று வகையில் சிந்தெடிக் பிளன்ட் முதல் இரண்டில் சில முக்கியமான அம்சங்களை கொண்டதாக உள்ளது. இந்த மூன்று விதமான ஆயில்களும் பல்வேறு வகைகளில் பல்வேறு தரம் மற்றும் எடைகளில் தேவைகேற்ப பயன்படுத்தப்படுகிறது. மிக சிறப்பானதாக உள்ள ஆயில்களாக கார் மற்றும் படகு போன்ற வாகனங்களில் உள்ள கையேடு அடிப்படையில் சிறந்த வகை ஆயில்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவையே அந்த இன்ஜினின் திறனை மேம்படுத்துகிறது. சிங்கில் கிரேடு எனும் SAE முத்திரை பெற்ற ஆயில்கள் SAE 40 என்பது அச்சிடப்பட்டிருக்கும். இது அந்த ஆயிலின் அடர்த்தி மற்றும் அதிகபட்ச வெப்ப நிலையில் அதன் திறன் வெளிப்பாடு பற்றிக் கூறுவது. இதிலேயே மல்டி சிங்கள் கிரேடு ஆயில் என்பது 10 W 40 என்றவாறு உள்ளன. இது சிறப்பான தன்மையுடன் பனிக்காலம் மற்றும் வெயில் காலத்தில் இரண்டிலும் சிறப்பாக பயன் அளிக்க கூடியது. கன்வென்ஷனல் மோட்டார் ஆயில் என்பது கொஞ்சம் விலை கூடுதலானது. அதுவும் மூன்று வகையானது. இது கச்சா எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் சிறந்த வகை ஆயில். இது வேகமாக செயல்படுவது. ஆனால் அதிகபடியான வெப்பத்தால் எரிந்து விடும் தன்மை கொண்டது. கன்வென்ஷனல் ஆயில் கொஞ்சம் கந்தகம் மற்றும் சில நுண்பொருட்களும் கலந்து தரப்படுகிறது. ஆயில் வாகனங்களில் உயிர்நாடியாக திகழ்கிறது. என்ஜினின் ஆயுள் அதிகரிக்கும் ஆயில்தான் வாகனத்தின் சிறப்பான இழுவைக்கு பயன்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|