பதிவு செய்த நாள்
13 ஜன2013
00:11
மும்பை:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், வெளி நாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,), இந்திய வங்கிகளில் மேற்கொண்ட டெபாசிட், 1,124 கோடி டாலராக (61,820 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 639 கோடி டாலராக (35,145 கோடி ரூபாய்) இருந்தது.டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் என்.ஆர்.ஐ., டெபாசிட்டிற்கான வட்டி உயர்வு போன்ற காரணங்களால், டெபாசிட் வரத்து அதிகரித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவடைந்தது. இந்நிலையில், ஜூன் மாதத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, இதுவரை இல்லாத அளவிற்கு, 57.32 ஆக மிகவும் சரிவடைந்தது.இந்நிலையில், ரிசர்வ் வங்கி, கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம், என்.ஆர்.ஐ., டெபாசிட்டுகளுக்கான வட்டி விகித கட்டுப்பாட்டை நீக்கியது.
இதையடுத்து, பல வங்கிகள், மேற்கண்ட டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை உயர்த்தின. இதனால், வெளிநாடுவாழ் இந்தியர்கள் மிக அதிகளவில், இந்திய வங்கிகளில் டெபாசிட் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, வெளிநாடு வாழ் இந்தியர்களே தாய்நாட்டிற்கு, மிக அதிக அளவில் தொகையை அனுப்பியுள்ளதாக தெரியவந்துஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|