பதிவு செய்த நாள்
13 ஜன2013
00:13
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 4ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 158 கோடி டாலர் (8,690 கோடி ரூபாய்) குறைந்து, 29,499 கோடி டாலராக (16.22 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய, டிசம்பர் 28ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 4 கோடி டாலர் (220 கோடி ரூபாய்) உயர்ந்து, 29,657 கோடி டாலராக (16.31 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்திருந்தது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதே வாரத்தில், அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு, 26,106 கோடி டாலர் என்ற அளவிலும், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 440 கோடி டாலர் என்ற அளவிலும் உள்ளன. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, 2,721 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 230 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|