பதிவு செய்த நாள்
13 ஜன2013
00:19
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான, ஒன்பது மாத காலத்தில், நாட்டின் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு, 40.52 கோடி டன்னாக குறைந்துள்ளது.
இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (41.82 கோடி டன்) விட, 3.09 சதவீதம் குறைவாகும்.பாதிப்புசர்வதேச பொருளாதார சுணக்க நிலையால், பல நாடுகள் பாதிக்கப் பட்டுள்ளன. இதனால், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலத்தில், இந்தியாவின் ஏற்றுமதி, 21,410 கோடி டாலராக (11.77 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.இது, கடந்த ஆண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (22,650 கோடி டாலர்/12.45 லட்சம் கோடி ரூபாய்) விட, 5.5 சதவீதம் குறைவாகும்.
இதையடுத்து, இந்தியாவில் உள்ள, முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு ஒட்டுமொத்த அளவில் குறைந்துள்ளது என, இந்திய துறைமுகங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கோல்கட்டா :கோல்கட்டாவில், கோல்கட்டா டாக் சிஸ்டம் மற்றும் ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் ஆகிய இரு துறைமுகங்கள் உள்ளன. நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாத காலத்தில், இவ்விரு துறைமுகங்களிலும், கையாண்ட சரக்கின் அளவு, 14.65 சதவீதம் சரிவடைந்து, 3.38 கோடி டன்னிலிருந்து, 2.88 கோடி டன்னாக குறைந்துள்ளது.
இவற்றுள், கோல்கட்டா டாக் சிஸ்டம் துறைமுகத்தில், கையாளப்பட்ட சரக்கின் அளவு, 7.73 சதவீதம் குறைந்து, 93.92 லட்சம் டன்னிலிருந்து, 86.66 லட்சம் டன்னாகவும், ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 17.31 சதவீதம் குறைந்து, 2.44 கோடி டன்னிலிருந்து, 2.01 கோடி டன்னாகவும் சரிவடைந்து உள்ளன.
தமிழகத்தில், சென்னை, எண்ணூர் மற்றும் வ.உ.சிதம்பரனார் ஆகிய மூன்று பெரிய துறைமுகங்கள் உள்ளன. இதில், சென்னை துறைமுகத்தில் கையாளப்பட்ட சரக்கின் அளவு, 4.87 சதவீதம் குறைந்து, 4.19 கோடி டன்னிலிருந்து, 3.98 கோடி டன்னாக சரிவடைந்துஉள்ளது.எண்ணூர் துறைமுகம்:அதேசமயம், எண்ணூர் துறைமுகத்தில் கையாளப்பட்ட சரக்கின் அளவு, 17.51 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 கோடி டன்னிலிருந்து, 1.22 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், கையாண்ட சரக்கின் அளவு, 0.47 சதவீதம் உயர்ந்து, 2 கோடி டன்னிலிருந்து, 2.09 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 16.04 சதவீதம் குறைந்து, 5.26 கோடி டன்னிலிருந்து, 4.42 கோடி டன்னாக குறைந்துள்ளது. பரதீப் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 0.61 சதவீதம் உயர்ந்து, 4 கோடி டன்னிலிருந்து, 4.07 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 0.14 சதவீதம் உயர்ந்து, 1.48 கோடி டன்னிலிருந்து, 1.49 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.நியூ மங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 11.52 சதவீதம் உயர்ந்து, 2.42 கோடி டன்னிலிருந்து, 2.70 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
மர்மகோவா துறைமுகம் கையாண்ட சரக்கு, 47.36 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 2.83 கோடி டன்னிலிருந்து, 1.49 கோடி டன்னாக குறைந்துள்ளது.கண்ட்லா துறைமுகம் :மும்பை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 9.63 சதவீதம் உயர்ந்து, 4 கோடி டன்னிலிருந்து, 4.40 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.
ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் கையாண்ட சரக்கின் அளவு, 3.06 சதவீதம் குறைந்து, 4.94 கோடி டன்னிலிருந்து, 4.79 கோடி டன்னாக குறைந்துள்ளது.கண்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 14.10 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6 கோடி டன்னிலிருந்து, 6.94 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|