பதிவு செய்த நாள்
14 ஜன2013
02:23
ஈரோடு:குழந்தைகளை கவரும் விதமாக, டிரான்ஸ்பரண்ட் மினி இட்லியை தயாரிக்க, பாலி கார்பன் இட்லி தட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன.தமிழர்களின் பழமையான உணவுகளில் இட்லி முதன்மையானது. மூன்று தலைமுறைகளுக்கு முன், கிராமப்புறத்தில் வீடுகளில், பித்தளையால் ஆன இட்லி பாத்திரங்களை பயன்படுத்தி வந்தனர்.ஒரு முறை இட்லி அவிக்க, மாவை ஊற்றிவிட்டு, கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்து விடலாம் என்பர்.
ஒவ்வொரு இட்லியையும், இன்றைய குழந்தைகளிடம் காண்பித்தால், 'பேமிலி இட்லியா' என, கேட்கும்படியாக பெரியதாக இருக்கும்.விறகு அடுப்பு காலம் மாறி, மண்ணெண்ணெய், காஸ் அடுப்பு வந்ததும், சில்வர், அலுமினியம், இட்லி குக்கர் என, விதவிதமாக வந்தன.இன்றைய நவீன காலத்தில், ஹோட்டல்களுக்கு குடும்பத்துடன் செல்லும் குழந்தைகள், விரும்பி கேட்பது, மினி இட்லி, பொடி இட்டி, வெஜிடெபிள் இட்லி, இட்லி பிரை, சாம்பார் இட்லி வகைகளைத் தான்.
தற்போது, குழந்தைகளை கவரும் வகையில், 'டிரான்ஸ்பரண்ட்' மினி இட்லியை தயாரிக்க, புதிதாக பாலி கார்பன் இட்லி தட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
ஈரோடு மெட்டல் மார்ட் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:தமிழர்களின் பாரம்பரிய உணவான இட்லி, குழந்தைகளுக்கு மிகவும் பிரியமான உணவாகும். உணவு தயாரிக்க பயன்படுத்தும் பாலி கார்பன் மூலமாக, புதிதாக நான்ஸ்டிக் இட்லி தட்டு ஒன்றை தனியார் நிறுவனம் தயாரித்து புழக்கத்துக்கு விட்டுள்ளது. 'நான்ஸ்டிக்' இட்லி தட்டில், இட்லி தட்டில், எண்ணெய் தடவியும், தடவாமலும், மாவு ஊற்றி விரைவாக இட்லி வார்க்கலாம்.
நான்கு அடுக்குகளில், 20 இட்லி வரை வேக வைக்கலாம். பெரிய தட்டில், 16 இட்லி வரை வேகவைக்க முடியும். அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு செட், 'நான்ஸ்டிக்' இட்லி தட்டு, 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|