மிளகாய் வற்றல் விலை உயர்ந்ததுமிளகாய் வற்றல் விலை உயர்ந்தது ... உருக்கு உற்பத்தி திறன் 10 கோடி டன்னாக உயரும் உருக்கு உற்பத்தி திறன் 10 கோடி டன்னாக உயரும் ...
நாட்டின் நெல் கொள்முதல்1.90 கோடி டன்னாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2013
02:26

புதுடில்லி:நடப்பு 2012-13ம் பருவத்தில், சென்ற வியாழன் வரையிலுமாக, மத்திய அரசின் நெல் கொள்முதல், 1.90 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த பருவத்தின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதலை விட, 10 லட்சம் டன் அதிகமாகும்.உள்நாட்டில், இந்திய உணவு கழகம் மற்றும் மாநில அரசுகளின் முகமை அமைப்புகள், விவசாயிகளிடமிருந்து, நெல்லை கொள்முதல் செய்கின்றன.
சென்ற அக்டோபர் முதல், இதுவரையிலுமாக, நெல் வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, மத்திய அரசு, நடப்பு பருவத்தில், நெல் கொள்முதல் இலக்கை, 4 கோடி டன்னாக உயர்த்தியுள்ளது. இது, கடந்த பருவத்தில், 3.50 கோடி டன்னாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.கடந்த பருவத்தை விட, நடப்பு பருவத்தில், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இருந்து, நெல் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாகவே, நெல் கொள்முதல் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. நடப்பு பருவத்தில், மேற்கண்ட இரண்டு மாநிலங்களின் பங்களிப்பு முறையே, 25 லட்சம் டன் மற்றும் 85 லட்சம் டன் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுஉள்ளது.
கடந்த 2011-12ம் ஆண்டின், அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், மேற்கண்ட இரண்டு மாநிலங்கள், மத்திய தொகுப்பிற்கு முறையே, 19 லட்சம் மற்றும் 76 லட்சம் டன் நெல்லை அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.மேற்கண்ட இரண்டு மாநிலங்கள் தவிர, ஆந்திரா (20 லட்சம் டன்), சத்தீஸ்கர் (29 லட்சம் டன்) மற்றும் ஒடிசா (11 லட்சம் டன்) ஆகிய மாநிலங்களிலிருந்தும் அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில், போதிய அளவிற்கு மழையின்மையால், இதுவரை, இம்மாநிலத்திலிருந்து, 7.60 லட்சம் டன் அளவிற்கே நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டின் இதே காலத்தில், இம்மாநிலத்திலிருந்து, 16 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. நடப்பு முழு பருவத்தில், ஆந்திராவிலிருந்து, 96 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், கடந்த பருவத்தில், இம்மாநிலத்தில் இருந்து, 50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)