நாட்டின் நெல் கொள்முதல்1.90 கோடி டன்னாக அதிகரிப்புநாட்டின் நெல் கொள்முதல்1.90 கோடி டன்னாக அதிகரிப்பு ... வெளி மாநிலங்களுக்கு காடா துணி ஏற்றுமதி:ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு வெளி மாநிலங்களுக்கு காடா துணி ஏற்றுமதி:ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ... ...
உருக்கு உற்பத்தி திறன் 10 கோடி டன்னாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2013
02:28

மும்பை:நடப்பு 2013ம் ஆண்டில், நாட்டின் உருக்கு உற்பத்தித்திறன், 10 கோடி டன்னாக அதிகரிக்கும் என, தரக் குறியீட்டு நிறுவனமான, 'கேர்' தெரிவித்துள்ளது.
அதேசமயம், போதிய அளவிற்கு இரும்புத்தாது கிடைக்காததாலும், உருக்கிற்கான தேவை குறைந்துள்ளதாலும், உருக்கு உற்பத்தி நிறுவனங்களின் லாப வரம்பு குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.பயன்பாடு:கடந்த 2012ம் ஆண்டில், நாட்டின் உருக்கு உற்பத்தி, 6.82 கோடி டன்னாக இருந்தது. இது, இதற்கு முந்தைய, 2011ம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (6.51 கோடி டன்) விட, 3.5 சதவீதம் அதிகமாகும்.
இதே ஆண்டுகளில், நாட்டின் உருக்கு பயன்பாடு, 5.2 சதவீதம் வளர்ச்சிகண்டு, 6.34 கோடி டன்னிலிருந்து, 6.67 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. உருக்கு இறக்குமதி, 25 சதவீதம் அதிகரித்து, 56 லட்சம் டன்னிலிருந்து, 70 லட்சம் டன்னாகவும், இதன் ஏற்றுமதி, 16.2 சதவீதம் வளர்ச்சிகண்டு, 37 லட்சம் டன்னிலிருந்து, 43 லட்சம் டன்னாகவும் இருந்தது.தற்போதைய நிலையில், உள்நாட்டில், உருக்கு நிறுவனங்களுக்கு போதிய அளவிற்கு, இரும்புத்தாது கிடைப்பதில்லை.
நடப்பு 2013ல் உருக்கு நிறுவனங்களுக்கு, 16-17 கோடி டன் இரும்புத்தாது தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், அந்த அளவிற்கு இரும்புத்தாது கிடைக்காததால், 3 கோடி டன் அளவிற்கு பற்றாக்குறை இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இத்துறை நிறுவனங்கள், பெருமளவிற்கு இரும்புத்தாதுவை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்ற மதிப்பீடும் உள்ளது.உருக்கிற்கான தேவை குறைந்துஉள்ளதை அடுத்து, நடப்பாண்டில், உருக்கு உற்பத்தி அதே அளவிற்கு தான் இருக்கும் என, தெரிகிறது.
இந்நிலையில், வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், இந்நிறுவனங்களுக்கு நடைமுறை மூலதனச் செலவு அதிகரித்துள்ளது. திட்டங்கள் :இதை ஈடுகட்டும் வகையில், சென்ற டிசம்பர் மாதத்தில், இத்துறை நிறுவனங்கள், உருக்கின் விலையை, டன்னுக்கு, 500-1,000 ரூபாய் வரை உயர்த்தின.நடப்பு 2013ம் ஆண்டில், இந்திய நிறுவனங்களின், உருக்கு உற்பத்தி, கடந்த ஆண்டை விட, 5 சதவீதம் அதிகரிக்கும் என, உலக உருக்கு உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு, அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைக்களுக்காக, 1 லட்சம் கோடி டாலர் மதிப்பீட்டில், பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள உள்ளது. அவ்வாறு, திட்டங்கள் மேற்கொள்ளப்படும் நிலையில், உருக்கிற்கான தேவை மேலும் அதிகரிக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)