பதிவு செய்த நாள்
14 ஜன2013
15:09
புதுடில்லி : 2014ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வர இருந்த கார் எனப்படும் பொதுவரி ஏய்ப்பு தடை சட்டத்தை மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்துள்ளது. தற்போதுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நிதியமைச்சராக இருந்தபோது கடந்த 2012-13ம் ஆண்டு பட்ஜெட்டில் கார் எனும் சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் இந்த சட்டத்திற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. இந்நிலையில் நிதியமைச்சராக சிதம்பரம் பொறுப்பேற்ற பின்னர் 2014ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி இந்த சட்டம் அமலாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த சட்டத்தை ஒத்திவைப்பதாக சிதம்பரம் அறிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து சிதம்பரம் கூறியுள்ளதாவது, முதலீட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் கார் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யவும், பிரதமரால் நியமிக்க சோம் கமிட்டியின் அறிவுறுத்தலின் பேரில் சில மாற்றங்கள் செய்யவும் இந்த சட்டத்தை ஒத்திவைத்திருப்பதாகவும், 2016ம் ஆண்டில் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தின் இந்த அறிவிப்பை அடுத்து காலையில் சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் மதியத்திற்கு பிறகு நல்ல ஏற்றம் கண்டன. குறிப்பாக நிப்டி மீண்டும் 6000 புள்ளிகளை தாண்டியது. மதியம் 3 மணியளவில் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு அதிகமாகவும், நிப்டி 60 புள்ளிகளுக்கு அதிகமாகவும் உயர்ந்து காணப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|