பதிவு செய்த நாள்
15 ஜன2013
23:39
சேலம்: தமிழகத்தில், நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தொடர் மின்வெட்டால், அரிசி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால்,சாதாரண அரிசி முதல், உயர்ரக அரிசி வரை, குவிண்டாலுக்கு, 150 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.டெல்டா மாவட்டங்கள்தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டுமின்றி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களிலும், நெல் விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நெல் அதிக அளவில் விளையும் திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம், செஞ்சி, செங்குன்றம், செங்கல்பட்டு, சேத்துபட்டு, செய்யாறு, வந்தவாசி, ராமநாதபுரம், ஆவுடையார் கோவில் ஆகிய இடங்களில், நெல் விளைச்சல் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
உத்தரபிரதேசம்குறைந்த அளவில் விளைந்த நெல்லை, வியாபாரிகள் அதிக விலை கொடுத்து, கொள்முதல் செய்து வருகின்றனர்.தமிழகத்தில், நெல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அரிசி ஆலை உரிமையாளர்கள், பீகார், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து, நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர்.இவ்வாறு, நெல்லை கொள்முதல் செய்து தமிழகத்துக்கு கொண்டு வரும் நிலையில், மின்வெட்டு காரணமாக ஜெனரேட்டர் உதவியுடன், அரிசி உற்பத்தி மேற் கொள்ளப்படுவதால், அரிசி விலை மேலும் குவிண்டாலுக்கு, 150 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.இன்றைய நிலையில் அரிசி விலை விவரம்:வெள்ளை பொன்னி பழசு (ஒரு கிலோ) ரூ.50 - 51, புதுசு ரூ.44, கர்நாடக சோனா பொன்னி ரூ.36, பி.பி.டி., (பாபத்லால்) பொன்னி பழசு ரூ.45, புதுசு ரூ.43, கர்நாடக டீலக்ஸ் ரூ.42, ஏ.டி.டி.,45 ரூ.32, ஐ.ஆர்.,20 ரூ.32, ஐ.ஆர்.,50 ரூ.31 சில்லரை விற்பனை நிலையங்களில், இதை விட, இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை விலை அதிகம் உள்ளது.
பாசுமதி அரிசி:தமிழகத்தில், நடுத்தர மக்கள் பயன் படுத்தி வரும், பொன்னி உள்ளிட்ட அரிசி வகைகளின், விலை உயர்ந்துள்ள நிலையில், உயர் வருவாய் பிரிவினர் பயன் படுத்தும், சீரக சம்பா, பாசுமதி ரக அரிசியின் விலை, கிலோவுக்கு நான்கு ரூபாய் முதல், 15 ரூபாய் வரை, உயர்ந்துள்ளது.சீரக சம்பா முதல் ரகம், 62 ரூபாய்க்கு விற்றது, 68 ரூபாயாக உயர்ந்துள்ளது. இரண்டாம் ரகம், 58 ரூபாய்க்கு விற்றது, 64 ரூபாயாகவும், மூன்றாம் ரகம், 56 ரூபாய்க்கு விற்றது, 62 ரூபாயாகவும் உயர்ந்து உள்ளது.இந்தியாவில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாசுமதி ரக அரிசிக்கு வெளி நாடுகளில், வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், அவற்றின் விலை, கிலோவுக்கு, 10 - 15 ரூபாய் வரை, உயர்ந்துள்ளது.பஞ்சாப்:சேலா ரகம், 90 ரூபாய்க்கு விற்றது, 100 ரூபாய்க்கும், பழைய பி.ஆர்., ரகம், 100 ரூபாய்க்கு விற்றது, 115 ரூபாய்க்கும், பரிமல் ரகம், 80 ரூபாய்க்கு விற்றது, 95 ரூபாய்க்கும், பூசா ரகம், 95 ரூபாய்க்கு விற்றது, 108 ரூபாய்க்கும் விற்கிறது.பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பாசுமதி ரக நெல்லின் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இதன் விலை மேலும் உயரும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|