பதிவு செய்த நாள்
15 ஜன2013
23:40
மும்பை: வங்கிகளில் தற்போது, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட வட்டி வருவாய்க்கு, மூல வரியாக குறைந்தபட்சம், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.இந்த வரம்பை, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, வங்கிகள் கூட்டமைப்பு, வருவாய் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளது. சீரான வரி விதிப்புநேரடி வரிகள் விதிகளின்படி, சீரான வரி விதிப்பு மற்றும் வருவாய் மீதான பணவீக்கத்தின் அடிப்படையில், இந்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வங்கிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.மேலும், இத்தகைய நடைமுறையால், வங்கிகள் மற்றும் வருமான வரித்துறையில், குறிப்பிடத்தக்க அளவிற்கு ஆவணப் பணி, மனிதவளம் ஆகியவை குறையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், வயதானவர்கள் ஆகியோரிடம், வருமான வரி கணக்கு எண் (பான் அட்டை) இல்லையென்றாலும், அவர்களின் டெபாசிட் மீதான வட்டி வருவாயில், 15 ஜி அல்லது, 15 எச் படிவத்தின் அடிப்படையில், மூல வரி பிடித்தமின்றி வழங்கவும் அனுமதி கோரப்பட்டுள்ளது.தற்போது, பான் அட்டை இல்லாமல், 15 ஜி அல்லது 15 எச் படிவம் அளித்தால், வட்டி வருவாயில் 20 சதவீதம் மூல வரியாக பிடித்தம் செய்யப்படுகிறது. பான் அட்டை அளித்தால், ஆண்டுக்கு, 10ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட வட்டி வருவாய்க்கு, 10 சதவீத மூல வரி பிடித்தம் செய்யப்படுகிறது.வாடிக்கையாளர்கள் 60 வயதிற்கு உட்பட்டவர்கள், தாங்கள் வருமான வரி வரம்பிற்குள் இல்லை என, சுயமாக தெரிவிப்பதற்கு படிவம், 15 ஜி பயன்படுகிறது. 60, வயதிற்கு மேற்பட்டவர்கள், 15 எச் படிவம் பயன்படுத்த வேண்டும்.வங்கிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டால், பொருளாதாரத்தில் நலிவுற்றோர், வங்கிகளில் கணக்கு வைத்துள்ள மூத்த குடிமக்கள் பயன் அடைவர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|