நிமிடத்திற்கு 500 போன் விற்கும் சாம்சங்நிமிடத்திற்கு 500 போன் விற்கும் சாம்சங் ... நாட்டின் பருத்தி உற்பத்தி 3.53 கோடி டன்னாக குறையும் நாட்டின் பருத்தி உற்பத்தி 3.53 கோடி டன்னாக குறையும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
"வட்டி வருவாய் வரி வரம்பை உயர்த்த கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2013
23:40

மும்பை: வங்கிகளில் தற்போது, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட வட்டி வருவாய்க்கு, மூல வரியாக குறைந்தபட்சம், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.இந்த வரம்பை, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, வங்கிகள் கூட்டமைப்பு, வருவாய் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளது. சீரான வரி விதிப்புநேரடி வரிகள் விதிகளின்படி, சீரான வரி விதிப்பு மற்றும் வருவாய் மீதான பணவீக்கத்தின் அடிப்படையில், இந்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வங்கிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.மேலும், இத்தகைய நடைமுறையால், வங்கிகள் மற்றும் வருமான வரித்துறையில், குறிப்பிடத்தக்க அளவிற்கு ஆவணப் பணி, மனிதவளம் ஆகியவை குறையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், வயதானவர்கள் ஆகியோரிடம், வருமான வரி கணக்கு எண் (பான் அட்டை) இல்லையென்றாலும், அவர்களின் டெபாசிட் மீதான வட்டி வருவாயில், 15 ஜி அல்லது, 15 எச் படிவத்தின் அடிப்படையில், மூல வரி பிடித்தமின்றி வழங்கவும் அனுமதி கோரப்பட்டுள்ளது.தற்போது, பான் அட்டை இல்லாமல், 15 ஜி அல்லது 15 எச் படிவம் அளித்தால், வட்டி வருவாயில் 20 சதவீதம் மூல வரியாக பிடித்தம் செய்யப்படுகிறது. பான் அட்டை அளித்தால், ஆண்டுக்கு, 10ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட வட்டி வருவாய்க்கு, 10 சதவீத மூல வரி பிடித்தம் செய்யப்படுகிறது.வாடிக்கையாளர்கள் 60 வயதிற்கு உட்பட்டவர்கள், தாங்கள் வருமான வரி வரம்பிற்குள் இல்லை என, சுயமாக தெரிவிப்பதற்கு படிவம், 15 ஜி பயன்படுகிறது. 60, வயதிற்கு மேற்பட்டவர்கள், 15 எச் படிவம் பயன்படுத்த வேண்டும்.வங்கிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டால், பொருளாதாரத்தில் நலிவுற்றோர், வங்கிகளில் கணக்கு வைத்துள்ள மூத்த குடிமக்கள் பயன் அடைவர்.


Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)