பதிவு செய்த நாள்
15 ஜன2013
23:40
கோல்கட்டா: இந்துஸ்தான் மோட்டார்ஸ் (எச்.எம்.,), அதன் சென்னை தொழிற்சாலையின் உபரி உற்பத்தி திறனை பயன்படுத்துவது குறித்து, வாகன தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
எச்.எம்., அதன் சென்னை தொழிற்பிரிவை தனியே பிரித்து, எச்.எம்.பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. ஆண்டுக்கு, 24 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்யும் சென்னை பிரிவு, மிட்சுபிஷியின் "லேன்சர்' கார் தயாரிப்பிற்காக உருவாக்கப்பட்டது.தற்போது, இப்பிரிவில் "பஜேரோ', "அவுட்லேண்டர்' வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இப்பிரிவின் கார் விற்பனை, 2,000 ஆக உள்ளது. இதை, 5,000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வகை கார்கள் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதால், கூடுதல் உற்பத்தி திறனை, இதர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வது குறித்து, எச்.எம்., பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உத்தம்போஸ் தெரிவித்தார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|