பதிவு செய்த நாள்
15 ஜன2013
23:42
நியூயார்க்: பிரபல சமூக வலைத்தளமான, "ட்விட்டர்', வரும் ஆண்டில், பங்கு வெளியீட்டில் இறங்கி, 1,500 கோடி டாலர் திரட்ட திட்டமிட்டுள்ளது.கடந்த 2012ம் ஆண்டு, மே மாதம், சமூக வலைத் தளமான "பேஸ்புக்', அமெரிக்க பங்குச் சந்தையில், பங்கு வெளியீடு மேற்கொண்டு, 1,600 கோடி டாலரை திரட்டிக் கொண்டது.இதையடுத்து, தற்போது, "ட்விட்டர்' வலைத் தள நிறுவனமும், அதன் விரிவாக்கத் திட்டங்களுக்காக, பங்கு வெளியீட்டில் களமிறங்குகிறது. இது தொடர்பான பணிகளை, நடப்பாண்டு இறுதிக்குள் முடித்து, வரும் 2014ம் ஆண்டின், முதல் காலாண்டில் பங்கு வெளியீடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.சென்ற 2012ம் ஆண்டில், இந்நிறுவனத்தின் வருவாய், 24.50 கோடி டாலராக உயர்ந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டில், 8.75 கோடி டாலராக இருந்தது.உலகெங்கும், "ட்விட்டர்' வலைத்தளத்தை, 20 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|