"ட்விட்டர்' பங்கு வெளியீடு1,500 கோடி டாலர் திரட்ட திட்டம்"ட்விட்டர்' பங்கு வெளியீடு1,500 கோடி டாலர் திரட்ட திட்டம் ... வணிக வரி துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு : 4,500 காலியிடங்கள் நிரப்பப்படாததால்... வணிக வரி துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு : 4,500 காலியிடங்கள் ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தானியங்கள் கையிருப்பு 6.67 கோடி டன்னாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2013
23:42

புதுடில்லி: நாட்டின், உணவு தானியங்கள் கையிருப்பு, சென்ற 1ம் தேதி வரையிலுமாக, 6.67 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என, இந்திய உணவு கழகம் தெரிவித்துள்ளது.இது, தேவையான கையிருப்பான, 2.50 கோடி டன்னை விட, 167 சதவீதம் அதிகமாகும்.கோதுமைநடப்பு 2012-13ம் பருவத்தில், நாட்டின் கிழக்கு மற்றும் தென் மாநிலங்கள் தவிர, பெரும்பாலான வட மாநிலங்களில், தானிய உற்பத்தி மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக, நடப்பு பருவத்தில், கோதுமை உற்பத்தி, புதிய உச்ச அளவை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம், உணவு தானியங்களை சேமித்து வைப்பதற்கு, போதிய இட வசதி இல்லாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.நடப்பு வேளாண் சந்தைப்படுத்தும் பருவத்தில், கோதுமை கொள்முதல், ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கும். சென்ற அக்டோபர் 1ம் தேதி முதல், நெல் கொள்முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்திய உணவு கழகமும், மாநில முகமை அமைப்புகளும், இதுவரை, 2.51 கோடி டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளன. இது, கடந்த ஆண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதலை விட, 6 சதவீதம் அதிகமாகும். பஞ்சாப், அரியானா, சத்தீஸ்கர், ஆந்திரா ஆகிய மாநிலங்களில், நெல் உற்பத்தி நல்ல அளவில் அதிகரித்துள்ளது.நாட்டின், கிழக்கு மாநிலங்களில், நெல் உற்பத்தி குறைந்துள்ளது. அதனால், இம்மாநிலங்களின் நெல் கொள்முதல், கடந்த பருவத்தின் இதே காலத்தை விட குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இலக்குநம் நாடு, ஆண்டுக்கு, சராசரியாக, 3.80 கோடி டன் நெல்லை கொள்முதல் செய்கிறது. இந்த நெல், மத்திய தொகுப்பிலிருந்து, பொது வினியோக திட்டத்தின் வாயிலாக, குறைந்த விலையில் விற்பனை செய்கிறது.நடப்பு பருவத்தில், மத்திய அரசு, 4 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, கடந்த 2011-12ம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட கொள்முதலை விட, 15 சதவீதம் அதிகமாகும்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)