பதிவு செய்த நாள்
15 ஜன2013
23:42
புதுடில்லி: நாட்டின், உணவு தானியங்கள் கையிருப்பு, சென்ற 1ம் தேதி வரையிலுமாக, 6.67 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என, இந்திய உணவு கழகம் தெரிவித்துள்ளது.இது, தேவையான கையிருப்பான, 2.50 கோடி டன்னை விட, 167 சதவீதம் அதிகமாகும்.கோதுமைநடப்பு 2012-13ம் பருவத்தில், நாட்டின் கிழக்கு மற்றும் தென் மாநிலங்கள் தவிர, பெரும்பாலான வட மாநிலங்களில், தானிய உற்பத்தி மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக, நடப்பு பருவத்தில், கோதுமை உற்பத்தி, புதிய உச்ச அளவை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம், உணவு தானியங்களை சேமித்து வைப்பதற்கு, போதிய இட வசதி இல்லாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.நடப்பு வேளாண் சந்தைப்படுத்தும் பருவத்தில், கோதுமை கொள்முதல், ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கும். சென்ற அக்டோபர் 1ம் தேதி முதல், நெல் கொள்முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்திய உணவு கழகமும், மாநில முகமை அமைப்புகளும், இதுவரை, 2.51 கோடி டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளன. இது, கடந்த ஆண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதலை விட, 6 சதவீதம் அதிகமாகும். பஞ்சாப், அரியானா, சத்தீஸ்கர், ஆந்திரா ஆகிய மாநிலங்களில், நெல் உற்பத்தி நல்ல அளவில் அதிகரித்துள்ளது.நாட்டின், கிழக்கு மாநிலங்களில், நெல் உற்பத்தி குறைந்துள்ளது. அதனால், இம்மாநிலங்களின் நெல் கொள்முதல், கடந்த பருவத்தின் இதே காலத்தை விட குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இலக்குநம் நாடு, ஆண்டுக்கு, சராசரியாக, 3.80 கோடி டன் நெல்லை கொள்முதல் செய்கிறது. இந்த நெல், மத்திய தொகுப்பிலிருந்து, பொது வினியோக திட்டத்தின் வாயிலாக, குறைந்த விலையில் விற்பனை செய்கிறது.நடப்பு பருவத்தில், மத்திய அரசு, 4 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, கடந்த 2011-12ம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட கொள்முதலை விட, 15 சதவீதம் அதிகமாகும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|