பதிவு செய்த நாள்
15 ஜன2013
23:44
குன்னூர்: காஷ்மீர் எல்லையில் நிலவும் பதற்றத்தால், இந்திய தேயிலை கொள்முதலை, பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது.இந்திய தேயிலையை கொள்முதல் செய்வதில், ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முதல் இரு இடங்களில் உள்ளன.பாகிஸ்தான், 2011ல், 2.50 கோடி கிலோ, 2012ல், 3 கோடி கிலோ தேயிலைத் தூளை இந்தியாவிடமிருந்து வாங்கியது. நடப்பாண்டு முதல், 2015ம் ஆண்டுக்குள், 5 கோடி கிலோ தேயிலைத் தூளை இந்தியாவிலிருந்து கொள்முதல் செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.கடந்தாண்டு, சி.டி.சி., மற்றும் டஸ்ட் ரகங்களை, பாகிஸ்தான் வாங்கியதுதற்போது, காஷ்மீர் எல்லையில் நிலவும் பதற்றத்தால், இந்தியாவிலிருந்து பல்வேறு பொருட்களை கொள்முதல் செய்ய, பாகிஸ்தான் வர்த்தகர்கள் தயங்குகின்றனர்.இதனால், அவர்களின் தேயிலை கொள்முதல் முழுமையாக நின்று போயுள்ளது. அதற்கு பதிலாக, கென்யா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள், தேயிலையை கொள்முதல் செய்து வருகின்றன.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|