பதிவு செய்த நாள்
16 ஜன2013
09:29
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (9.06 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 19.26 புள்ளிகள் சரிந்து 19967.56 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 0.10 புள்ளிகள் குறைந்து 6056.50 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின், பங்கு வர்த்தகம், செவ்வாய்க் கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. இதுவரை, மூன்றாவது காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ள பல, நிறுவனங்களின், செயல்பாடு நன்கு உள்ளதை அடுத்து, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, தேவை அதிகரித்திருந்தது.இந்நிலையில், ஜப்பான் நாட்டின், மத்திய வங்கி, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், வலுவான நிதிகொள்கையை அறிவிக்க இருப்பதாக, செய்தி வெளியானது. இதையடுத்து, ஜப்பான் நாட்டின் பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது. இருப்பினும், ஹாங்காங், சிங்கப்பூர், தென்கொரியா ஆகிய நாடுகளில் பங்கு வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|