பதிவு செய்த நாள்
16 ஜன2013
10:07
பொங்கல் பண்டிகையைமுன்னிட்டு, இரண்டு நாளில் மது விற்பனை, 220 கோடி ரூபாய்க்கு நடந்துள்ள நிலையில், இன்றைய விற்பனை மூலம், இலக்கு பூர்த்தியாகும் என்ற நிலை காணப்படுவதால், "டாஸ்மாக்' அதிகாரிகள்நிம்மதி பெரு மூச்சு விட்டுள்ளனர்.
தமிழகத்தில் செயல்படும், 6,850 "டாஸ்மாக்' கடைகள் மூலம், மது விற்பனை நடக்கிறது. மது விற்பனையில், ஆண்டுக்கு ஆண்டு புதிய சாதனை படைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, மது விற்பனை செய்ய இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.200 கோடி:
தற்போது, டாஸ்மாக் கடைகளில் வார நாட்களில், 50 கோடி ரூபாய் வரையிலும், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில், 75 கோடி ரூபாயும், விசேஷ தினங்களில், 90 கோடி ரூபாயை தாண்டியும், மது விற்பனை நடப்பது வழக்கமாக உள்ளது.புத்தாண்டு, 2013யை முன்னிட்டு, "டாஸ்மாக்' விற்பனை இலக்கு, 200 கோடி ரூபாய்க்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 177 கோடிக்கு மட்டுமே விற்பனை நடந்தததால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதனால், பொங்கல் பண்டிகை விற்பனை இலக்கு, 400 கோடி ரூபாயில் இருந்து, 300 ரூபாயாக அதிரடியாக குறைப்பு செய்யப்பட்டது. அதற்கு ஏற்ப விற்பனை இலக்கை பூர்த்தி செய்யும் வகையில், கடைகளில், 15 நாள் விற்பனைக்கு, தேவையான சரக்குகள் குவிக்கப்பட்டன.
இரண்டே நாளில்...:
இந்நிலையில், பொங்கலுக்கு முதல் நாள், ஜன., 13ம் தேதி, அதிகாரி களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, 108 கோடி ரூபாய்க்கு, சரக்கு விற்பனை நடந்தது. அதை தொடர்ந்து பொங்கல் பண்டிகை நாளில், 112 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை நடந்து உள்ளது. இரண்டே நாளில், 220 கோடி ரூபாய் வரை, சரக்கு விற்பனை நடந்துள்ளது. இதுவே முதல் முறை.நேற்று விடுமுறையை தொடர்ந்து, இன்று, கரிநாளாக கடை பிடிக்கப்படுவதால், இன்றும், 100 கோடி ரூபாய் வரை, சரக்கு விற்பனை நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் நிர்ணயித்த இலக்கு பூர்த்தி ஆகிவிடும் என, அதிகாரிகள் நம்புகின்றனர். இது, அதிகாரிகளை நிம்மதி பெரு மூச்சு விடச் செய்துள்ளது.
இதுகுறித்து, "டாஸ்மாக்' அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் நிலவும் கடுமையான மின் வெட்டு காரணமாக, சிறு தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையிலும், புத்தாண்டை முன்னிட்டு, இரண்டு நாள் மது விற்பனை, 177 கோடி ரூபாய் வரைநடந்தது.ஆனால், பொங்கல் பண்டிகையில் இரண்டே நாளில், 220 கோடி ரூபாய் வரைக்கும், சரக்கு விற்பனை நடந்து உள்ளது, மாவட்ட மேலாளர்கள் எங்களுக்கு அளித்த தகவலை கொண்டு உறுதி செய்துள்ளோம்.
சிரமமே இல்லை :
தொடர்ந்து, இரண்டு நாள் விடுமுறை என்பதால், நாளை ஊழியர்கள் வங்கியில் பணம் செலுத்தும் நிலையில், இரண்டு நாள் பொங்கல்பண்டிகை விற்பனை நிலவரம், உறுதி செய்யப்பட்டு விடும்.பொங்கல் பண்டிகையைமுன்னிட்டு, நாங்கள் நிர்ணயித்த இலக்கு பூர்த்தியாகி விடும் என்பதால், நடப்பாண்டில் விற்பனை இலக்கை பூர்த்தி செய்வதில், எந்த சிரமமும் இருக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|