பதிவு செய்த நாள்
18 ஜன2013
00:12
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான, ஒன்பது மாத காலத்தில், ரயில்வே வருவாய், 89,906 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தை (75,009 கோடி ரூபாய்) விட, 19.86 சதவீதம் அதிகமாகும் என, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கணக்கீட்டு காலத்தில், சரக்குகள் கையாண்டதன் வாயிலான வருவாய், 25.15 சதவீதம் வளர்ச்சி கண்டு, 49,869 கோடியிலிருந்து, 62,413 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பயணிகள் வாயிலான வருவாய், 9.65 சதவீதம் உயர்ந்து, 20,999 கோடியிலிருந்து, 23,025 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதர வகையிலான வருவாய், 11.31 சதவீதம் வளர்ச்சியடைந்து, 2,107 கோடியிலிருந்து, 2,345 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், டிசம்பருடன் நிறைவடைந்த, ஒன்பது மாத காலத்தில், ரயிலில் முன்பதிவு செய்து, பயணம் செய்தோர் எண்ணிக்கை, 642 கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை (620 கோடி பேர்) விட, 3.42 சதவீதம் அதிகமாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|