பதிவு செய்த நாள்
18 ஜன2013
00:17
புதுடில்லி: நடப்பு சர்க்கரை சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்-செப்), ஜனவரி 15ம் தேதி வரையிலான முதல் மூன்றரை மாத காலத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 3 சதவீதம் அதிகரித்து, 1.08 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த பருவத்தின் இதே காலத்தில்,1.05 கோடி டன்னாக இருந்தது என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் சர்க்கரை உற்பத்தி, 3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 37.70 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதேபோன்று, கர்நாடகா மாநிலத்தில், இதன் உற்பத்தி, 16 சதவீதம் அதிகரித்து, 20 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
அதேசமயம், உத்தரபிரதேசத்தில், சர்க்கரை உற்பத்தி, 29.30 லட்சம் டன்னிலிருந்து, 27.50 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், ஆந்திராவின் சர்க்கரை உற்பத்தி, 4.60 லட்சம் டன்னாகவும், தமிழகத்தில், 4.90 லட்சம் டன்னாகவும் உள்ளது.நடப்பு 2012-13ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.40 கோடி டன்னாக இருக்குமென, இஸ்மா தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|