பதிவு செய்த நாள்
19 ஜன2013
00:37
புதுடில்லி:சென்ற நவம்பர் மாதத்தில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 11.40 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி யை (10.10 கோடி கிலோ) விட, 13 சதவீதம் அதிகமாகும்.
சர்வதேச அளவில், தேயிலை உற்பத்தியில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் பயன்பாட்டில், முக்கிய நாடாகவும் விளங்குகிறது.மதிப்பீட்டு காலத்தில், மேற்கொள்ளப்பட்ட மொத்த தேயிலை உற்பத்தியில், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் பங்களிப்பு, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என, தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தின் தேயிலை உற்பத்தி, 25 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4.83 கோடி கிலோவிலி ருந்து, 6 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தின் தேயிலை உற்பத்தி, 8 சதவீதம் உயர்ந்து, 2.77 கோடி கிலோவிலிருந்து, 3 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, வட மாநிலங்களின் தேயிலை உற்பத்தி, 17 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7.90 கோடி கிலோவிலிருந்து, 9.24 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. அதேசமயம், தென் மாநிலங்களின் தேயிலை உற்பத்தி, 2.20 கோடி கிலோவிலிருந்து, 2.15 கோடி கிலோவாக குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின், தேயிலை உற்பத்தி, 9.34 கோடி கிலோவாக சற்றே அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 9.24 கோடி கிலோ என்ற அளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|