பதிவு செய்த நாள்
20 ஜன2013
00:18
மும்பை:வரும் 2015-16ம் நிதியாண்டில், உள்நாட்டில், பெயின்ட் தொழிலின் சந்தை மதிப்பு, 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளதாக, இந்திய பெயின்ட் உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச பொருளாதார சுணக்க நிலையால், இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளாக, பெயின்ட் தொழிலின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, பல நாடுகள், பொருளாதார நெருக்கடியிலிருந்து, இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளன.
தற்போது, இந்தியாவில், பெயின்ட் தொழிலின் சந்தை மதிப்பு, 26,040 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இதில், அலங்கார பிரிவின் பங்களிப்பு, 71 சதவீதம் அதாவது, 18,490 கோடி ரூபாய் என்ற அளவிலும், தொழில் துறை சார்ந்த பிரிவின் பங்களிப்பு, 7,550 கோடி ரூபாய் என்ற அளவிலும் உள்ளன. வளர்ந்து வரும் நகரமயமாக்கல் காரணமாக, அடுத்த மூன்றாண்டுகளில், இந்தியாவில் பெயின்ட் தொழிலின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இதையடுத்து, வரும் 2016ம் நிதியாண்டில், பெயின்ட் தொழிலின் சந்தை மதிப்பு, 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|