இந்தியாவின் மருந்து ஏற்றுமதி இலக்கு எட்டப்படுமா?இந்தியாவின் மருந்து ஏற்றுமதி இலக்கு எட்டப்படுமா? ... ரூ.10 கோடி செலவில் ஆவின் பால் பண்ணைகள் நவீன மயம் ரூ.10 கோடி செலவில் ஆவின் பால் பண்ணைகள் நவீன மயம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
பிளாஸ்டிக் பொருட்கள் விலை பல மடங்கு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2013
00:22

கடும் மின்வெட்டு, மூலப்பொருட்களின் திடீர் விலையேற்றம், ஆள் பற்றாக்குறை ஆகியவற்றால், அனைத்து பிளாஸ்டிக் பொருட்களின் விலையும், 100 சதவீதம் உயர்ந்துள்ளது.மேலும், மின்வெட்டு பிரச்னையால், பிளாஸ் டிக் தொழிற்சாலைகள், அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றன.
வர்த்தகம்:தமிழகத்தில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தொழிற்சாலைகளில் ஆண்டுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது. இதில், 2,500 கோடி ரூபாய், வரியாக அரசுக்கு கிடைக்கிறது. அரசுக்கு அதிகளவில் வருவாய் தரும் துறைகளில், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழில், ஐந்தாவது இடத்தில் உள்ளது.
மூலப்பொருட்களின் கடுமையான விலையேற்றம், தொடரும் மின்தடை, ஆள் பற்றாக் குறை போன்றவற்றால், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.மூலப்பொருட்கள், வடமாநிலங் களில் இருந்து தான், தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. மூலப்பொருட்கள் விற்பனையில், 60 சதவீதம், தனியார் துறையிடம் உள்ளது. இதனால், அடிக்கடி விலை உயர்த்தப்படுகிறது.
மதிப்பு கூட்டு வரி:மேலும், வடமாநிலங்களில் இருந்து மூலப்பொருட்கள் கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவினம் மற்றும் தமிழகத்தில் விதிக்கப்படும், ஐந்து சதவீத மதிப்பு கூட்டு வரியால், உற்பத்திக்கு முன்பே மூலப்பொருட்களின் விலை கிலோவுக்கு, இரண்டு ரூபாய் அதிகரித்து விடுகிறது.இதனால், பக்கத்து மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் விலை அதிகமாக உள்ளது.
கடும் மின்வெட்டால், பல தொழிற்சாலைகள் முடங்கிய நிலையில் உள்ளன. ஓசூர், வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றன. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைஇழந்து வருகின்றனர்.தமிழகத்தில் போதுமான அளவிற்கு ஆட்கள் கிடைக்காத காரணத்தால், ஒடிசா, பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்களே இத்தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றனர்.
ஜெனரேட்டர்கள்:இது குறித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை யாளர்கள் சங்கத்தின் தலைவர் சங்கரன் கூறியதாவது:மின்வெட்டின் போது டீசல் ஜெனரேட்டர்களை பயன்படுத் தியே பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்குகின்றன. எனவே, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு சலுகை விலையில் டீசல் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதனால், பிளாஸ்டிக் தொழில் பக்கத்து மாநிலங்களுக்கு இடம்பெயர்வதை தடுக்க முடியும்.
பணியாளர்கள்:மேலும், பிளாஸ்டிக் துறைக்கு தற்போது, 10 ஆயிரம் திறமையான பணியாளர்கள் தேவையெனில், 800 நபர்கள் மட்டுமே கிடைக்கின்றனர். பிளாஸ்டிக் துறைக்கு வளமான எதிர்காலம் உள்ளது. இது தொடர்பான புதியபடிப்புகளை பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., போன்றவற்றில் அதிகளவில் அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், பிளாஸ்டிக் துறைக்கு தேவையான, திறமையான நபர்கள் போதிய அளவில் கிடைப்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)