பதிவு செய்த நாள்
21 ஜன2013
04:06
புதுடில்லி:சென்ற டிசம்பர் மாதத்தில், உள்நாட்டிற்குள், விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 54 லட்சம் என்ற அளவில் குறைந்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டின், இதே மாதத்தை விட, (56 லட்சம் பேர்) 4 சதவீதம் குறைவாகும் என, விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துஉள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில், உள்நாட்டில், இந்தியன் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ உள்ளிட்ட, ஏழு நிறுவனங்கள் விமானச் சேவையில் ஈடுபட்டிருந்தன. இதில், குறைந்த கட்டணத்தில், விமானச் சேவை வழங்கி வரும், இண்டிகோ நிறுவனமே அதிக அளவில் பயணிகளை கையாண்டுள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், விமான சேவை ரத்து, காலதாமத பயணம், டிக்கெட்டை ரத்து செய்தது போன்ற காரணங்களால், விமானச் சேவை நிறுவனங்கள், 1.09 லட்சம் பயணிகளுக்கு, 1.40 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளன.சென்ற 2012ம் முழு ஆண்டில், உள்நாட்டில் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 5.88 கோடியாக குறைந்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டில், 6.06 கோடி என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|