பதிவு செய்த நாள்
21 ஜன2013
04:16
சென்னை:சுங்க வரி உயர்த்தப்படும் என்ற அச்சப்பாட்டால், தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. ஒரே வாரத்தில், சராசரியாக, ஒரு மாதத்திற்கான தங்கம், இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம், 10 கிராம் தங்கத்தின் விலை, 30 ஆயிரம் ரூபாயை தாண்டிய போதிலும், அதன் விற்பனை குறையாமல் உள்ளதாக, வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருவதற்கு, அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்வதும் முக்கிய காரணம். மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, இரண்டு சதவீதத்தில் இருந்து நான்கு சதவீதமாக, உயர்த்தப்பட்டது. இதையடுத்து, தங்கம் இறக்குமதி சற்று குறைந்துஉள்ளது.இந்நிலையில், மீண்டும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, அடுத்த மாத இறுதியில், வரும் 2013-14ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டிற்கு முன்பாக ஒரு முறையும், பட்ஜெட்டில் ஒரு முறையும் என, இரு தடவை, தங்க இறக்குமதி மீதான சுங்க வரி உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.இந்த வகையில், தங்கத்திற்கான இறக்குமதி வரி, 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது.இதனால், தங்க நகை வர்த்தகர்கள், அவசர அவசரமாக, அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யத் துவங்கி உள்ளனர்.நடப்பு ஜனவரி மாதம், முதல் வாரம் வரை, 50 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது, சராசரியாக ஒரு மாதத்தில் இறக்குமதி செய்யப்படும் அளவாகும்.
இதையடுத்து, வரி உயர்விற்கு முன்பாக, நடப்பு மாதம், தங்கத்தின் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தே சமயம், வரி உயர்விற்கு பின்னர், தங்கம் இறக்குமதி குறையும் என்று தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|