சுத்திகரிப்பு தாவர எண்ணெய் இறக்குமதி உயரும்சுத்திகரிப்பு தாவர எண்ணெய் இறக்குமதி உயரும் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ...
லட்சம் பேர்"கல்தா' நிச்சயம்:பி.எஸ்.என்.எல்., நிறுவனம் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2013
10:00

புதுடில்லி:பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், ஒரு லட்சம் ஊழியர்களுக்கு, விருப்ப ஓய்வு அளிக்க திட்டமிட்டுள்ளது.பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., வட்டாரங்கள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. நிறுவனத்தின் வருவாயில், 48 சதவீதத்தை, ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவிட வேண்டிய நிலை உள்ளது. இது, அந்த நிறுவனத்துக்கு, பெரும் சுமையாக உள்ளது.
எனவே, இந்த சுமையை குறைக்கும் வகையில், விருப்ப ஓய்வு திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், ஒரு லட்சம் ஊழியர்கள், தேவைக்கு அதிகமாக பணியாற்றி வருகின்றனர்.எனவே, இந்த கூடுதல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பதன் மூலம், இவர்களுக்கான சம்பளத் தொகை, மீதமாகும் என, அதிகாரிகள் மதிப்பிட்டு உள்ளனர். ஒரு லட்சம் பேர், விருப்ப ஓய்வு பெற்றால், தற்போதுள்ள சம்பளச் சுமையில், 15 சதவீதம் வரை குறையும்.
இதன் பின்,நிறுவனத்தை, சுமுகமான முறையில் செயல்படுத்த முடியும். அளவுக்கு அதிகமான ஊழியர்களின் எண்ணிக்கையைத் தவிர, மேலும் ஒரு பிரச்னையும் உள்ளது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், தற்போது பணியாற்றும் ஊழியர்களின் சராசரி வயது, 50 ஆக உள்ளது. இதில், குறிப்பிட்ட சிலருக்கு, வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு, போதிய திறமை இல்லை.இவ்வாறு, பி.எஸ்.என்.எல்., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)