பதிவு செய்த நாள்
22 ஜன2013
01:15
புதுடில்லி:நாட்டின் முன்பேர சந்தைகளின் வர்த்தகம், நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், 130 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்டதை (137 லட்சம் கோடி ரூபாய்) விட, 5.54 சதவீதம் குறைவாகும் என, பார்வர்டு மார்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) தெரிவித்துள்ளது.
கணக்கீட்டு காலத்தில், தங்கம், வெள்ளி மீதான வர்த்தகம், 25.30 சதவீதம் சரிவடைந்து, 80.37 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 60.03 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதேசமயம், வேளாண் விளை பொருட்கள் மீதான வர்த்தகம், 16 சதவீதம் வளர்ச்சி கண்டு, 14.72 லட்சம் கோடியிலிருந்து, 17.13 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
இதே காலத்தில், தங்கம் வெள்ளி அல்லாத இதர உலோகங்கள் மீதான முன்பேர வர்த்தகம், 17 சதவீதம் அதிகரித்து, 20.43 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 24 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. எரிசக்தி மீதான வர்த்தகம், 21.71 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 28.47 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.உள்நாட்டில், தேசிய மற்றும் மாநிலங்கள் அளவில், 20க்கும் மேற்பட்ட முன்பேர சந்தைகள் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|