பதிவு செய்த நாள்
22 ஜன2013
01:19
மும்பை:நடப்பு மாதத்தில் (1 - 18ம் தேதி) இது வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.,), 13 ஆயிரம் கோடி ரூபாயை, இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளன. மதிப்பீட்டு காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், 42,926 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன. அதேசமயம், 29,525 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன. இதையடுத்து, அன்னிய நிதி நிறுவனங்களின் நிகர முதலீடு, 13,401 கோடி ரூபாய் (250 கோடி டாலர்) என்ற அளவில் உள்ளது என, "செபி' வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்பாண்டில் இதுவரை, அன்னிய நிதி நிறுவனங்கள், கடன்பத்திரங்களில் மேற்கொண்ட முதலீட்டிலிருந்து, 563 கோடி ரூபாயை விலக்கி கொண்டுள்ளன. இதையடுத்து, பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களில் மேற்கொண்ட மொத்த முதலீடு, 12,838 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.
சென்ற, 2010ம் ஆண்டில், இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட நிகர முதலீடு, 1.33 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதையடுத்து, இரண்டாவது முறையாக சென்ற, 2012ம் ஆண்டில் தான், எப்.ஐ.ஐ., மேற்கொண்ட நிகர முதலீடு, 1.28 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.ஜனவரி 18ம் தேதி நிலவரப்படி, "செபி' அமைப்பிடம் பதிவு செய்து கொண்ட அன்னிய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை, 1,759 ஆக உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|