பதிவு செய்த நாள்
22 ஜன2013
01:24
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், ரபி பருவத்தில், உணவு தானியங்கள் பயிரிடும் பரப்பளவு, கடந்த நிதியாண்டின், இதே பருவத்தை விட, 46 லட்சம் ஹெக்டேர் அதிகரித்து, 592.02 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.இது, சென்ற ரபி பருவத்தில், 591.56 லட்சம் ஹெக்டேராக இருந்தது என, மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நடப்பு நிதியாண்டில், ஒட்டு மொத்த ரபி பருவத்தில் கோதுமை சாகுபடி பரப்பளவு 294.98 லட்சம் ஹெக்டேராக உள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 295.93 லட்சம் ஹெக்டேராக இருந்தது.இதே காலத்தில், நெல் பயிரிடும் பரப்பளவு, 10.49 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 8.79 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில், மக்காச்சோளம் பயிரிடும் பரப்பளவு, 37.56 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 38.67 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
இதே போன்று, இதர தானியங்களின் பயிர் பரப்பும், 58.37 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 60.55 ஹெக்டேராக அதிகரித்து உள்ளது.கடலை வகைகளின் பயிர் பரப்பளவு, 88.91 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 91.90 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.எனினும், பருப்பு வகைகளின் பயிர் பரப்பளவு, 143.26 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 142.33 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.
எண்ணெய் வித்துக்களின் பயிர் பரப்பளவு, 83.51 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 85.37 லட்சம் ஹெக்டேராக உயர்ந்து உள்ளது. கடுகு மற்றும் வெள்ளை கடுகு பயிரிடும் பரப்பளவு, 65.23 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 67.04 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.ரபி பருவத்தில், பொதுவாக, அக்டோபரில் விதைப்பு பணிகள் தொடங்கி, ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை நடைபெறும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|