பதிவு செய்த நாள்
22 ஜன2013
01:28
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள் கிழமையன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின், மூன்றாம் காலாண்டிற்கான நிதி நிலை முடிவுகள் நன்கு இருந்தன. இதையடுத்து, இந்நிறுவனங்களின் பங்குகளில், முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு மேற்கொண்டதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம், ஏற்றத்துடன் முடிவடைந்தது.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இருப்பினும், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே காணப்பட்டது.நேற்றைய வர்த்தகத்தில், பொறியியல், நுகர் பொருட்கள், எண்ணெய், எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், ரியல் எஸ்டேட், ஆரோக்கிய பராமரிப்பு, மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 62.78 புள்ளிகள் அதிகரித்து, 20,101.82 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 20,163.38 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,056.46 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ரிலையன்ஸ், எல் அண்டு டி உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், சன் பார்மா, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 17.90 புள்ளிகள் உயர்ந்து, 6,082.30 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 6,094.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,065.10 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|