ரயில்வே கட்டணம் உயர்ந்தது; நள்ளிரவில் அமல்ரயில்வே கட்டணம் உயர்ந்தது; நள்ளிரவில் அமல் ... டில்லியில் ஏழை குடும்பங்களுக்கு மானிய விலையில் 12 சமையல் காஸ் சிலிண்டர் டில்லியில் ஏழை குடும்பங்களுக்கு மானிய விலையில் 12 சமையல் காஸ் சிலிண்டர் ...
தங்க முதலீட்டு திட்டத்தில் மாற்றம் வரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2013
08:19

புதுடில்லி : இறக்குமதி தங்கத்திற்கு வரியை மத்திய அரசு உயர்த்தி இருப்பதால், தங்க முதலீட்டு திட்டத்தில் மாற்றம் வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. இது குறித்து, மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலர் அரவிந்த் மாயாராம் நிருபர்களிடம் கூறியதாவது: பரஸ்பர நிதி நிறுவனங்கள், தங்கத்தில் நேரடியாக வாங்கி குவிப்பதற்கு பதில், வங்கிகளின் தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், கோல்டு இ.டி.எப்., திட்டங்களை, தங்க முதலீட்டு திட்டத்துடன் இணைத்துள்ளது. மேலும், தங்க முதலீட்டு திட்டத்தில் தனி நபர்களும், தங்களிடம் உள்ள தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்யும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இந்த மாற்றங்கள், தங்க இறக்குமதியை ஓரளவு கட்டுப்படுத்தும்; இதன் மூலம், பற்றாக்குறையை குறைப்பதற்க வழி ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
உயர்வு கடந்தாண்டு, இந்தியாவில் தங்க இறக்குமதி, 3 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், டிசம்பர் வரை, 2 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இறக்குமதி வரி உயர்த்தப்படுவதையடுத்து, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை, நேற்று, ஒரு சவரனுக்கு, 48 ரூபாய் அதிகரித்தது. காலையில், ஒரு கிராம தங்கம், 2,857 ரூபாய் இருந்தது. மாலையில், 2,863 ரூபாயாக இருந்தது. குறைப்பு தங்க முதலீட்டு திட்டத்தில் முன்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்த குறைந்த பட்ச முதலீட்டு அளவு குறைக்கப்படுகிறது. அதேபோல், குறைந்த பட்ச முதலீட்டுக்கான காலம், மூன்றாண்டுகளில் இருந்து, 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. தங்க முதலீட்டு திட்டம் குறித்து ரிசர்வ் வங்கியும், கோல்டு இ.டி.எப் திட்டம் குறித்து,"செபி'யும் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)