பதிவு செய்த நாள்
22 ஜன2013
08:19
புதுடில்லி : இறக்குமதி தங்கத்திற்கு வரியை மத்திய அரசு உயர்த்தி இருப்பதால், தங்க முதலீட்டு திட்டத்தில் மாற்றம் வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. இது குறித்து, மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலர் அரவிந்த் மாயாராம் நிருபர்களிடம் கூறியதாவது: பரஸ்பர நிதி நிறுவனங்கள், தங்கத்தில் நேரடியாக வாங்கி குவிப்பதற்கு பதில், வங்கிகளின் தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், கோல்டு இ.டி.எப்., திட்டங்களை, தங்க முதலீட்டு திட்டத்துடன் இணைத்துள்ளது. மேலும், தங்க முதலீட்டு திட்டத்தில் தனி நபர்களும், தங்களிடம் உள்ள தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்யும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இந்த மாற்றங்கள், தங்க இறக்குமதியை ஓரளவு கட்டுப்படுத்தும்; இதன் மூலம், பற்றாக்குறையை குறைப்பதற்க வழி ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
உயர்வு கடந்தாண்டு, இந்தியாவில் தங்க இறக்குமதி, 3 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், டிசம்பர் வரை, 2 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இறக்குமதி வரி உயர்த்தப்படுவதையடுத்து, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை, நேற்று, ஒரு சவரனுக்கு, 48 ரூபாய் அதிகரித்தது. காலையில், ஒரு கிராம தங்கம், 2,857 ரூபாய் இருந்தது. மாலையில், 2,863 ரூபாயாக இருந்தது. குறைப்பு தங்க முதலீட்டு திட்டத்தில் முன்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்த குறைந்த பட்ச முதலீட்டு அளவு குறைக்கப்படுகிறது. அதேபோல், குறைந்த பட்ச முதலீட்டுக்கான காலம், மூன்றாண்டுகளில் இருந்து, 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. தங்க முதலீட்டு திட்டம் குறித்து ரிசர்வ் வங்கியும், கோல்டு இ.டி.எப் திட்டம் குறித்து,"செபி'யும் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|