பதிவு செய்த நாள்
22 ஜன2013
09:10
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (9.06 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 14.50 புள்ளிகள் அதிகரித்து 20116.32 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 12.50 புள்ளிகள் குறைந்து 6069.80 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள் கிழமையன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின், மூன்றாம் காலாண்டிற்கான நிதி நிலை முடிவுகள் நன்கு இருந்தன. இதையடுத்து, இந்நிறுவனங்களின் பங்குகளில், முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு மேற்கொண்டதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம், ஏற்றத்துடன் முடிவடைந்தது. ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இருப்பினும், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|