தங்க முதலீட்டு திட்டத்தில் மாற்றம் வரும்தங்க முதலீட்டு திட்டத்தில் மாற்றம் வரும் ... ஆப்பிள் தர இருக்கும் விலை மலிவான ஐபோன் ஆப்பிள் தர இருக்கும் விலை மலிவான ஐபோன் ...
டில்லியில் ஏழை குடும்பங்களுக்கு மானிய விலையில் 12 சமையல் காஸ் சிலிண்டர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2013
10:10

புதுடில்லி : டில்லியில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு, 12 சமையல் காஸ் சிலிண்டர்களை மானிய விலையில் வழங்க, முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையிலான, காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும், சமையல் காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை, ஆண்டுக்கு ஆறாக குறைக்க, கடந்த செப்டம்பரில், மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, டில்லி மாநிலத்தில், ஆண்டுக்கு, ஒன்பது காஸ் சிலிண்டர்கள், மானிய விலையில் வழங்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்தது. இதற்காக, கூடுதலாக செலவாகும் தொகையை, மாநில அரசே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும், மற்ற மாநிலங்களிலும், இதே நடைமுறையை பின்பற்ற, காங்கிரஸ் தலைவர் சோனியா வலியுறுத்தினார். இந்நிலையில், மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை, ஆண்டுக்கு ஒன்பதாக உயர்த்தி, சமீபத்தில், மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, டில்லி அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று, முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் நடந்தது. இதில், மண்ணெண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்கும் திட்டத்தின் கீழ், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, மானிய விலையில் வழங்கப்படும் காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை, ஆண்டுக்கு, 12 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த வகையில், 3.56 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு, 12 காஸ் சிலிண்டர்கள் கிடைக்க உள்ளன. டில்லி நகரில் மண்ணெண்ணெய் பயன்படுத்துவதை, முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், "மண்ணெண்ணெய் இல்லா டில்லி' என்ற புது திட்டத்தை, மாநில அரசு துவக்கியது. இதன்படி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு, கேஸ் ஸ்டவ், சிலிண்டர், ரெகுலேட்டர் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)