பதிவு செய்த நாள்
23 ஜன2013
00:41
பெங்களூரு:வரும் 2015ம் ஆண்டில், மின்னணு மற்றும் அது சார்ந்த வடிவமைப்பு, செமி கண்டக்டர் உள்ளிட்ட தயாரிப்புகளின் சந்தை மதிப்பு, 5 லட்சம் கோடி ரூபாயாக (9,420 கோடி டாலர்) உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
தற்போது, இத்துறை ஆண்டுக்கு, 9.9 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.சென்ற 2011ம் ஆண்டு, இத்துறையின் சந்தை மதிப்பு, 6,460 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது என, இந்திய செமிகண்டக்டர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் மின்னணு சாதனங்களுக்கான தேவைப்பாட்டில், 65 சதவீதம் இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது. அரசு கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால், சென்ற 2011ம் ஆண்டு, 2,800 கோடி டாலராக இருந்த, மின்னணு சாதனங்கள் இறக்குமதி, வரும் 2015ம் ஆண்டில், 4,200 கோடி டாலராக உயரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|