பதிவு செய்த நாள்
23 ஜன2013
00:45
புவனேஸ்வர்:மத்திய அரசு, இரும்புத் தாது ஏற்றுமதிக்கான வரியை நீக்கினால், அது, உள்நாட்டில் உருக்கு தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களை பாதிப்படையச் செய்யும் என, "அசோசெம்' தெரிவித்துள்ளது.பல்வேறு சுற்றுப்புற சூழல்களை கருத்தில் கொண்டு, இரும்புத் தாது உற்பத்திக்கு, ஏற்கனவே உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிதாக, இரும்புத் தாது வெட்டியெடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரும்புத்தாது ஏற்றுமதிக்கான வரி நீக்கப்பட்டால், இதை மூலப் பொருளாக கொண்டு இயங்கி வரும், உள்நாட்டு உருக்கு தயாரிப்பு நிறுவனங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகும்.ஏற்றுமதி வரியை குறைக்க வேண்டும் என்ற, ஒரு சில சுரங்க நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்றால், அது, உருக்கு துறைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும்.ஆகவே, உள்நாட்டு நிறுவனங்களின் நலன் கருதி, இரும்புத் தாது ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, அசோசெம் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|