ஏற்றுமதி வரி நீக்கப்பட்டால்உருக்கு துறை பாதிப்படையும்ஏற்றுமதி வரி நீக்கப்பட்டால்உருக்கு துறை பாதிப்படையும் ... சொகுசு கார்களை இந்தியாவில் தயாரிக்கும் நிறுவனங்கள்:இறக்குமதி செலவை குறைக்க... சொகுசு கார்களை இந்தியாவில் தயாரிக்கும் நிறுவனங்கள்:இறக்குமதி செலவை ... ...
பொது காப்பீட்டு நிறுவனங்களின் வட்டி வருவாய் வளர்ச்சி குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2013
00:47

கோல்கட்டா:உள்நாட்டில் செயல்படும் பொதுக்காப்பீட்டு நிறுவனங்களின், முதலீட்டின் வாயிலாக கிடைக்கும் வட்டி வருவாய் வளர்ச்சி, கடந்த நிதியாண்டில், 1.34 சதவீதமாக சரிவடைந்துள்ளது.இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 22.13 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
அரசு நிறுவனங்கள் :பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள், அவை திரட்டும் பிரிமிய தொகையை, பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. அதன் வாயிலாக கிடைக்கும் வட்டி வருவாய், தற்போது குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பொதுக் காப்பீட்டு துறையில், அரசு நிறுவனங்களை விட, தனியார் நிறுவனங்களின் வட்டி வருவாய், மிகவும் குறைவாக உள்ளது.
கடந்த 2011-12ம் நிதியாண்டில், பொதுக்காப்பீட்டு நிறுவனங்களின் வட்டி வருவாய், சென்ற நிதியாண்டில், 9,508 கோடி ரூபாயாக குறைந்து ள்ளது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டில், 9,832 கோடி ரூபாயாக இருந்தது என, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டீ.ஏ.,) தெரிவித்துள்ளது.அரசு துறை காப்பீட்டு நிறுவனங்களின் முதலீட்டின் மீதான வட்டி வருவாய், கடந்த 2011-12ம் நிதியாண்டில், 7,424 கோடி ரூபாயாக இருந்தது.
இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 7,842 கோடி ரூபாயாக சற்று உயர்ந்து காணப்பட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, முதலீட்டு சந்தை நன்கு இல்லாததால், இத்துறை நிறுவனங்களின், முதலீடுகளின் மீதான வட்டி வருவாய் குறைந்துள்ளது. தற்போது, நிலைமை சீரடைந்து வருவதால் நடப்பு நிதியாண்டில், இவற்றின் வட்டி வருவாய் வளர்ச்சி உயரும் என, பொதுக் காப்பீட்டு துறையைச் சேர்ந்த நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பங்கு சார்ந்த திட்டங்கள்:இருப்பினும், சென்ற நிதியாண்டில், தனியார் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் வட்டி வருவாய் வளர்ச்சி நன்கு இருந்தது. அதாவது, சென்ற நிதியாண்டில், இந்நிறுவனங்களின் வட்டி வருவாய், 2,084 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 1,540 கோடி ரூபாயாக இருந்தது.பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள், அவற்றின் மொத்த முதலீட்டு வருவாயில், பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களின் வாயிலாக, 12-15 சதவீத அளவிற்கும், நிலையான முதலீட்டு திட்டங்கள் மூலம், 10-12 சதவீத அளவிற்கும் வருவாய் கிடைப்பதாக தெரிவித்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)