சொகுசு கார்களை இந்தியாவில் தயாரிக்கும் நிறுவனங்கள்:இறக்குமதி செலவை குறைக்க...சொகுசு கார்களை இந்தியாவில் தயாரிக்கும் நிறுவனங்கள்:இறக்குமதி செலவை ... ... இந்தியாவின் பருத்தி உற்பத்தி3.25 கோடி பொதிகளாக இருக்கும் இந்தியாவின் பருத்தி உற்பத்தி3.25 கோடி பொதிகளாக இருக்கும் ...
வரி உயர்வால் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2013
00:51

மும்பை:மத்திய அரசு, நாட்டின் தங்கம் இறக்குமதியை குறைக்கும் வகையில், நேற்று முன்தினம் தங்கம் மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியை, 4 சதவீதத்திலிருந்து, 6 சதவீதமாக உயர்த்தியுள்ளது.இதனால், உள்நாட்டில், தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளது என, பல மாநிலங்களை சேர்ந்த தங்க ஆபரண வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பற்றாக்குறை:மேலும், கடத்தல் வாயிலாக தங்கம் அதிகளவில் வருவதற்கும், இந்த இறக்குமதி வரி உயர்வு வழிவகுத்துள்ளது என, கூறப்படுகிறது. நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், 3,800 கோடி டாலர் மதிப்பிற்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக, தங்கம் இறக்குமதி வாயிலாக, நம்நாட்டின் அன்னியச் செலாவணி அதிகளவில் வெளியேறுகிறது.
நாட்டின் ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை 5.4 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து உள்ளது. எனவே, மத்திய அரசு, பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 600 டன்னாக இருந்தது. இந்நிலையில், வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ள நான்காவது காலாண்டில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 100-150 டன்னாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
செலவினம்:சென்ற டிசம்பருடன் நிறைவடைந்த காலாண்டில், தங்கம் இறக்குமதி, 200 டன்னாக இருந்தது என, மும்பை தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.மத்திய அரசு, தங்கத்தின் மீதான வரியை, 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு கிராம் தங்கம் இறக்குமதிக்கான வரி செலவினம், 60 ரூபாயாகவும், ஒரு கிலோ தங்கம் இறக்குமதிக்கான வரி செலவினம், 1.40 லட்சம் ரூபாயிலிருந்து, 2 லட்சம் ரூபாயாகவும் உயரும்.
இதனால், கள்ளக் கடத்தல் வாயிலாக, தங்கம் கொண்டு வருவது அதிகரிக்கும்.தங்கம் விலையில், சர்வதேச சந்தைக்கும், உள்நாட்டு சந்தைக்கும் உள்ள வித்தியாசம், 7 சதவீதம் என்ற அளவில் உயரும். வேலைவாய்ப்பு:வரி உயர்வால், உள்நாட்டில், தங்க ஆபரண துறையை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிப்புக்குள்ளாகும் என, ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசு, இறக்குமதி வரியை உயர்த்துவதற்கு பதிலாக, தங்கம் ஆபரணங்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அது, நாட்டின் ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கச் செய்வதுடன், இத்துறையை வளமாக்க வழிவகை செய்யும் என, மும்பை தங்க ஆபரண கூட்டமைப்பின் தலைவர் மோகித் கம்போஜ் தெரிவித்தார்.இந்தியாவை பொறுத்தவரை, பாரம்பரியமாக தங்கத்தில் முதலீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதுடன், மிகவும் பாதுகாப்பான முதலீடாகவும் கருதப்படுகிறது.
சவரனுக்கு ரூ.424 அதிகரிப்பு:தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதை அடுத்து, நேற்று, ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு, 424 ரூபாய் அதிகரித்து, 23,328 ரூபாயாக உயர்ந்து உள்ளது.22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,916 ரூபாய்க்கு விற்பனையானது. தங்கம் விலை மேலும் உயரும் என, நகை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.அதே சமயம், நேற்று வெள்ளி விலை வீழ்ச்சி கண்டது. ஒரு கிலோ வெள்ளி, 45 ரூபாய் குறைந்து, 59,460 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)